சென்னை, மார்ச் 16 - தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க வேண்டுமென்று பிறப்பிக்கப் பட்ட உத்தரவை சென்னை உயர் நீதி மன்றம் திரும்பப் பெற்றது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேல் பணியாற்றியபோது தவறான அறிக்கை களை தாக்கல் செய்ததாகவும், இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரிக்கக் கோரி சேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, வழக்கு தொடர்ந்துள்ள சேகரன் போலி பத்திரி கையாளர் என பொன் மாணிக்கவேல் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து, உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், மூத்த பத்திரிகை யாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை 3 மாதங்களில் ஏற்படுத்த வேண்டும் என நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் புதனன்று (மார்ச் 16) விசரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தாங்கள் தொடர்ந்த வழக்கில் பிரஸ் கவுன்சில் அமைக்க வேண்டும் என்று கோரவில்லை. இந்த நிலையில் தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டும். வழக்கை ஆரம்ப கட்டத்திலிருந்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க வேண்டுமென நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுவதாக உத்தரவிட்டனர். சேகரன் தொடர்ந்த வழக்கை இரண்டு வாரங்க ளுக்கு ஒத்தி வைத்தனர்.