சென்னை,மார்ச் 25- தாய்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து பேறுகால விடுப்பை 9 மாதத்திலிருந்து 12 மாதமாக உயர்த்திய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் பாராட்டு தெரிவித் துள்ளது. தருமபுரி மாவட்டம் பி.கோலப்பட்டி அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வரும் உமாதேவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், கடந்த 2006 இல் தனக்கு திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் கடந்த 2018இல் கணவரை பிரிந்து ராஜ்குமார் என்பவரை மறுமணம் செய்து கொண்ட தாகவும் பேறுகால விடுப்பு கேட்டு, மாவட்ட கல்வி அதிகாரியிடம் விண்ணப்பித்துள்ளார்.
மகப்பேறு விடுப்பு வழங்குவ தற்கான தகுதியின் அடிப்படையில், இரண்டு குழந்தைகளை மட்டுமே கொண்ட பெண் ஊழியர்களுக்கு மட்டுமே கிடைக்கும் மற்றும் மறு மணத்தின் காரணமாக மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கான விதி இல்லை என மறுத்து விட்டதாக சுட்டிக்காட்டி யுள்ளார். தான் 2017இல் தான் அரசு பள்ளி ஆசிரியராக பணிக்கு சேர்ந்ததாக வும் எனவே தனக்கு பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, மகப்பேறு பலன்க ளைப் பெறுவதற்காக குழந்தைகளின் எண்ணிக்கையில் மத்திய சட்டம் எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்காத வரை, வேறு எந்த விதியும் அல்லது விதிமுறைகளும் அத்தகைய கோரிக்கைக்கு எந்த தடையையும் விதிக்க முடியாது என்று உத்தரவிட்டு மனுதாரருக்கு உரிய மகப்பேறுகால விடுமுறையை அளிக்க உத்தரவிட் டுள்ளார். தாய்மையின் முக்கியத்துவம் மற்றும் ஆழமான புரிதலாலும் புதிதா கப் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளர்க்கப்பட வேண்டும் என்பதனால் பேறுகால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்திய மாநில அரசை இந்த உயர்நீதிமன்றம் பாராட்டுகிறது என்றும் தெரிவித் துள்ளார்.