tamilnadu

img

எதிர்கொண்ட சவால்களும் - ஸ்டாலினுடன் சந்திப்பும்

எதிர்கொண்ட சவால்களும் - ஸ்டாலினுடன் சந்திப்பும்

ஒவ்வொரு நாட்டிலும் அந்நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் அந்நாட்டில் நிலவும் அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்து தாம் நிறைவேற்றுவதற்கான செயல்திட்டங்களை உரு வாக்குகின்றன. இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி இந்தியப் புரட்சியை மூன்று கட்டங் களாகப் பிரித்துள்ளது. 1. தேச விடுதலை. 2. நிறை வேற்ற வேண்டிய ஜனநாயக கடமைகள் (இந்தியாவை பொறுத்தவரை அ. ஏகாதிபத்திய செல்வாக்கி லிருந்து நாட்டை விடுவிப்பது, ஆ. பெருமுதலாளித்துவ ஒழிப்பு, இ. நிலப்பிரபுத்துவ ஒழிப்பு ஆகியவை நிர்ண யிக்கப்பட்டுள்ளன). 3. சோசலிச புரட்சி - சோசலிச கட்டுமானம்.

ஜனநாயகப் புரட்சியின் பாதை

இந்தியப் புரட்சியின் மேற்கண்ட மூன்று கடமைகளில் முதல் கடமை - தேசத்தின் விடுதலை பெறப்பட்டு விட்டது. ஆம். அரசியல் அதிகாரம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு கைமாறி விட்டது. கம்யூனிஸ்ட் இயக்கம் இந்திய விடுதலைப்போரில் தீர்மானகரமான பங்கு வகித்துள்ளது. அடுத்து நிறை வேற்ற வேண்டியது மேலே குறிப்பிட்டுள்ள கடமை களை நிறைவேற்றுவதற்கான ஜனநாயகப் புரட்சி யாகும். அதுதான் தற்போது கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னுள்ள பிரதான கடமையாகும். இயல்பாகவே இந்த கடமையை நிறைவேற்று வதற்கான விவாதம் நாடு விடுதலை பெற்ற பிறகு உடனடியாக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் தொடங்கி யது. இந்தியாவின் ஜனநாயகப் புரட்சியை நடத்து வதற்கான செயல்திட்டம் - உத்திகள் - பாதை  போன்றவைகளே இந்த விவாதத்தின் அடிப்படை களாக இருந்தன. இந்த விவாதம் ஆழமானதாக மட்டுமல்ல; கடுமையானதாகவும் இருந்தது. வலது, இடது திரிபுகள் இரண்டுமே இந்த விவாதங் களில் வெளிப்பட்டன. இந்த விவாதங்களின் அடிப்படையில் 1948இல்  கட்சியின் அரசியல் தலைமைக்குழு செயல்திட்டத் திற்கான மூன்று ஆவணங்களை வெளியிட்டது. 1. மக்கள் ஜனநயாகம், 2. விவசாய பிரச்சனைகள், 3. நடைமுறை உத்தி. இந்த ஆவணங்களின்படி தீவிர மான போராட்ட வடிவங்களில் பல்வேறு போராட்டங் கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டன.

ரயில்வே வேலைநிறுத்தம் - சிறைச்சாலை போராட்டம்

இதன் ஒரு பகுதியாக 1949 மார்ச் 9இல் தேசம் தழுவிய ரயில்வே தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. இந்திய  அரசு இப்போராட்டத்தை ஒடுக்க கடுமையான அடக்கு முறைகளை ஏவியது. நாடு முழுவதும் பல ஆயி ரக்கணக்கான கம்யூனிஸ்ட் இயக்க ஊழியர்களும், தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நாடு முழுவதும் பல்வேறு சிறைகள் கம்யூனிஸ்ட் ஊழியர்கள் மற்றும் ஆதர வாளர்களால் நிரம்பி வழிந்தன என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் சிறைச்சாலைகளையும் வர்க்கப்  போராட்ட கோட்டைகளாக மாற்றுக என கம்யூனிஸ்ட்  இயக்க தலைமை அடுத்தக்கட்ட அறைகூவலை  வெளியிட்டது. பிறகு என்ன?. சிறைச்சாலைகளிலும் வலுவான போராட்டங்கள் உருவாகின. சிறைச்சாலை களை போராட்டக் களங்களாக மாற்ற முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசு அனுமதிக்குமா?. கொடூரமான அடக்குமுறைகள் - தடியடி - துப்பாக்கிச்சூடுகள் சிறைச்சாலைக்குள்ளேயே நடந்தன. புரட்சியின்பால் இருந்த நம்பிக்கை, கட்சியின்பால் இருந்த விசுவாசம் காரணமாக ஏராளமான கம்யூனிஸ்ட் ஊழியர்கள் தங்களின் இன்னுயிரை இப்போராட்டங்களில் இழந்தனர்.

சேலம் சிறைத்தியாகிகள்

தமிழகத்தில் சேலம் சிறைச்சாலையில் கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் ஆதரவாளர்களால் தீவிரப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனை ஒடுக்க அன்றைய அரசு 11.02.1950 அன்று கொடூரமான தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 22 பேர் மரணமடைந்தனர். இவர்களில் கணிச மான தோழர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வர்கள். தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சிலரும் இருந்த னர். தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் சேலம் சிறைச்சாலை தியாக பூமியாக மாறியது. இந்த அடக்குமுறையில் கொல்லப்பட்டவர்களின் விபரங்களை இங்கு குறிப்பிடுவது முக்கிய வரலாற்றின் பதிவாகும். அவர்கள் பெயர்கள் பின்வருமாறு: 1. காவேரி முதலியார் (சேலம்), 2. புல்ல ரஞ்ஞி யோடன் குஞ்ஞப்ப நம்பியார், 3. புல்லாஞ்ஞியோடன் கோவிந்த நம்பியார், 4. கோயில்லியோடன் நாராயணன் நம்பியார், 5. நீலஞ்சேரி நாராயணன் நாயர், 6. ஆசாத் கோபாலன் நாயர், 7. மயிலப்பிர வன் நாராயணன் நம்பியார், 8. பிலாட்டியோடன் கோபாலன் நம்பியார், 9. தளியன் ராமன் நம்பியார், 10 ஏ.சி. குஞ்ஞிராமன் நம்பியார், 11 கே. கோபாலன் குட்டி நாயார், 12 ஆறுமுகம் (சேலம்), 13 நக்காயி கண்ணன், 14. ஆசாரி அம்பாடி, 15. என். பாலன், 16. என். பத்மநாபன், 17. என். கோரன்,  18. கோரன் குருக்கள், 19. ஞண்டாடி குஞ்ஞம்பு, 20.அனந்தன், 21. ஷேக்தாவூத் (ஆந்திரா), 22. ஆண்டடோன் குஞ்ஞப்பா. ஒவ்வொரு ஆண்டும் சேலம் சிறைத் தியாகிகளை நினைவுகூர்ந்து கம்யூனிஸ்ட் இயக்கம் அஞ்சலி செலுத்தி வருகிறது. தற்போது 24வது கட்சிக் காங்கிரசையொட்டி சேலம் தியாக பூமியிலிருந்து தியாகச் சுடரை ஏந்தி ஒரு பயணக்குழு புறப்பட்டு வழியெங்கும் பிரச்சாரம் செய்து மதுரை மாநகரை வந்தடைகிறது.

எதிர்கொண்ட விதம்

அரசின் சித்தரவதைகள், ஒடுக்குமுறைகளை கம்யூனிஸ்ட்டுகள் எதிர்கொண்ட விதம், ஏற்றுக்கொண்ட உயிர்ப்பலி கண்டு ஜனநாயக உள்ளம் படைத்தவர்கள் அதிர்ந்து நின்றனர். தேசம் முழுவதும் பெரும் பரபரப்பையும், விவாத அலை களையும் ஏற்படுத்திய நிகழ்வுகளாக கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்திய அக்காலப் போராட்டங்களும், எதிர்கொண்ட அடக்குமுறைகளும் அமைந்தன.

சர்ச்சைகள்

மறுபுறம் கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியேயும் இப்போராட்டங்கள் குறித்து எதிரும் புதிருமான பெரும் சர்ச்சைகள் நடந்தன. அக்காலம் கம்யூனிஸ்ட் அகிலம் செயல்பட்டு வந்த  காலமாகும். இந்திய நிலைமைகளை ஆழமாக ஆய்வு செய்த கம்யூனிஸ்ட் அகிலம் அதன் அதி காரப்பூர்வமான பத்திரிகையில் இந்திய நிலைமை குறித்து ஒரு தலையங்கத்தை வெளியிட்டது. அந்த தலையங்கத்தின் தலைப்பு “மக்கள் ஜனநாயகத் திற்காக அமைதி இழந்த இந்தியா” என்பது தான். இந்த தலையங்கம் இந்திய கம்யூனிஸ்ட் இயக்க தலைமையின் செயல்பாடு குறித்து கூர்மையான விமர்சனங்களை முன்வைத்தது. இதோடு பல ஆலோசனைகளும் அதில் இடம்பெற்றிருந்தன. இயல்பாகவே இத்தலையங்கம் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் பெரும் விவாதங் களை உருவாக்கியது.

உடனடிக் கடமை

இந்த விவாதங்களின் பின்னணியில் 1950ம் ஆண்டு மத்தியில் கட்சியின் மத்தியக்குழு கூடி விமர்சனம் - சுயவிமர்சனம் அடிப்படையில் மேற்சொன்னப் போராட்டங்களை பரிசீலித்தது. தேசத்தின் அன்றைய நிலைமை - மக்களின் உணர்வு  இவைகளை கணக்கில் எடுத்து இப்போராட்டம் நடத்தப்பட்டதா என்பது பரிசீலனையின் பிரதான அம்சமாக இருந்தது. இந்த விவாதம் - பரிசீலனையின் இறுதியாக ஒரு விரிவான அறிக்கையை மத்தியக்குழு வெளியிட்டது. அந்த அறிக்கை யில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கே உரித்தான முறை யில் கட்சி தலைமையின் பல சுயவிமர்சனங்கள் இடம்பெற்றிருந்தன. இக்கூட்டத்தின் முக்கிய முடிவாக இந்தியப் புரட்சிக்கான பாதை இறுதிப்படுத்தப்பட்டது. ஆனா லும், நடைமுறையில் இப்பாதையை அமல்படுத்து வதிலும், பிரச்சனைகள் - சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது. கட்சிக்குள் அரசியல் - சித்தாந்த - ஸ்தாபன ஒற்றுமையை நிலைநாட்டுவது அவசரத் தேவையாக அக்காலத்தில் இருந்தது.

சோவியத் கட்சி தலைமை; ஸ்டாலினுடன் சந்திப்பு

இந்நிலைமைகளை ஆய்வு செய்திட்ட கட்சியின் அரசியல் தலைமைக்குழுவும், மத்தியக்குழுவும் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண சகோதர கட்சி என்ற முறையில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி - அதன் பிரதான தலைவராக விளங்கிய தோழர்  ஸ்டாலினின் தோழமைப்பூர்வமான உதவியை நாடுவது என்ற முடிவுக்கு வந்தன. சோவியத் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமை இதனை ஏற்றுக் கொண்டு இந்திய தலைவர்களை சோவியத் வரு மாறு அழைத்தது. இந்திய தலைவர்களுடன் விவாதிப்பதற்கு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தோழர்கள் ஸ்டாலின், மாலங்கோ, சுஸ்லோவ், மாலட்டோவ் ஆகிய தலைவர்களைக் கொண்ட குழுவை தீர்மானித்தது. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சார்பாக தோழர்கள் சி. ராஜேஸ்வரராவ், எம். பசவ புன்னையா, அஜய்குமார் கோஷ், எஸ்.ஏ. டாங்கே ஆகியோர் கொண்ட குழு சோவியத் யூனியனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தோழர் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களுடன் விரிவான விவாதங்களை நடத்தினர். இந்தியாவில் மார்க்சிய கோட்பாடு அடிப்ப டையில் செயல்படுத்த வேண்டிய திட்டம், நடை முறை பாதை, உத்திகள் குறித்து இந்த விவாதங்கள் பெருமளவு இருந்தன. விவாதங்களுக்கு தலைமை யேற்ற தோழர் ஸ்டாலின் சோவியத் கட்சியின் சார்பாக இறுதியாக பின்வருமாறு குறிப்பிட்டார்: “எங்கள் கடமை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களுக்கு சில விளக்கங்களை அளிப்பது மட்டும் தான். மார்க்சிய - லெனினிய கோட்பாடு அடிப்படையில் இந்திய நிலைமைகளை (அரசியல், பொருளாதார, சமூக) முடிந்தளவு துல்லியமாக ஆய்வு செய்து பொருத்தமான கடமைகளை உள்ள டக்கி இந்திய செயல்திட்டத்தை உருவாக்க வேண்டிய பெரும் பொறுப்பு இந்திய தலைவர் களையேச் சாரும். ஒவ்வொரு நாட்டிலும் புரட்சியின் தன்மை அந்தந்த நாடுகளில் உள்ள நிலைமைக்கு ஏற்றதாகவே அமைய முடியும். சோவியத் புரட்சி - சோவியத் தன்மை கொண்டது. சீனப்புரட்சி சீனத்  தன்மை கொண்டது. இந்திய புரட்சி - இந்திய நிலை மைகளுக்கேற்ற இந்தியத் தன்மை கொண்ட தாகவே இருக்க முடியும். உங்கள் நாட்டின் நிலைமை களை முறையாக ஆய்வு செய்து சரியான முடிவுக்கு வாருங்கள்” என தெளிவுபடுத்தினார். இதையொட்டி இருநாட்டு கம்யூனிஸ்ட் தலைவர்களிடையே பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களும் நடந்தன.

செயல்திட்டம் - கொள்கை அறிக்கை

சோவியத் - இந்திய கம்யூனிஸ்ட் இயக்க தலைவர்களிடையே நடைபெற்ற விவாதங்கள், கருத்து பரிவர்த்தனைகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன. இதன் பின்னர் 1951 மே மாதம் கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு இந்தி யாவில் நிலவும் அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளை மார்க்சிய - லெனினிய அடிப்ப டையில் விரிவாக ஆய்வு செய்தது. இதனடிப்படை யில் ஒரு செயல்திட்ட நகலை இக்குழு இறுதிப் படுத்தியது. 1951 அக்டோபர் இறுதியில் நடை பெற்ற கட்சியின் அகில இந்திய மாநாடு சில திருத்தங் களுடன் இந்த திட்டத்தை நிறைவேற்றியது. 1951 மாநாடு ஒரு கொள்கை அறிக்கையையும் வெளியிட்டது. மார்க்சிய கோட்பாடு அடிப்படையில் இந்திய புரட்சியின் பாதை, செயல்திட்டம், நடைமுறை உத்திகள் குறித்து புதிய வெளிச்சம் தருவதாக  அந்த கொள்கை அறிக்கை அமைந்தது. இந்த ஆவ ணங்கள் அனைத்தும் இந்திய புரட்சி, இந்திய  தன்மை வாய்ந்ததே என்பதையும், சோவியத் பாதையோ, சீனப் பாதையோ, இந்திய நிலை மைக்கு பொருந்தாது என்பதையும் தெளிவுபடுத்தி யது. இந்திய நிலைமைகளுக்கு பொருத்தி உரு வாக்கப்பட்டதே இந்தியப் பாதை என அது பிர கடனம் செய்தது. சிபிஐ (எம்) பிற்காலத்தில், அதாவது 1964ல் இறுதிப்படுத்திய பல அம்சங்கள் 1951 கொள்கை அறிக்கையில் இடம்பெற்றிருந்தன என்பதை  இங்கு குறிப்பிட வேண்டும். 1951 அக்டோபரில் இறுதிப்படுத்தப்பட்ட செயல்திட்டத்தை 1953ல் மதுரையில் நடைபெற்ற கட்சியின் மூன்றாவது அகில இந்திய மாநாடும் ஆமோதித்தது.

ஏற்பட்ட ஒற்றுமையும் சாதனைகளும்

இவ்வாறு சரியான கொள்கை, செயல்திட்ட அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் அக்காலத்தில் ஒற்றுமைப்படுத்தப்பட்டது. இந்த ஒற்றுமை கட்சி அணிகளிடையே பெரும் உத்வேகத்தையும், நம்பிக்கையையும் உரு வாக்கியது. பிற்பாடு நிகழ்ந்த அரசியல் நட வடிக்கைகளிலும் பொதுத்தேர்தல்களிலும் கூட அது பெரும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியது. கொடூர மான ஒடுக்குமுறைகளையும், சோதனைகளையும் சந்தித்த போதிலும் உழைக்கும் மக்கள் நலன் சார்ந்து தியாகப்பூர்வமாக செயல்பட்டதால் 1952, 1957 பொதுத்தேர்தல்களில் கம்யூனிஸ்ட் இயக்கம் குறிப்பிடத்தக்க வாக்குகளையும், நாடாளு மன்ற தொகுதிகளையும் கைப்பற்றி ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பிரதான எதிர்கட்சியாக இந்திய  நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இப் பொதுத் தேர்தல்களும் அதன் அனுபவங்களும் விரிவாக பரிசீலிக்கப்பட வேண்டியவையாகும்.