மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்கியதற்கான முதல் மாநிலமாக தமிழ்நாட்டை தேர்வு செய்து ஒன்றிய அரசின் சார்பில் புதுதில்லியில் நடந்த விழாவில் விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் வழங்கிய அந்த விருதை பெற்றுக்கொண்ட தமிழ்நாடு சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன், அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்துப்பெற்றார். துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.