சென்னை, பிப். 7- இந்தியாவில் உள்ள நீர்ப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அக்வாமேப் என்று அழைக்கப் படும் பல்துறை நீர் மேலாண்மை மற்றும் கொள்கை மையத்தை சென்னையில் உள்ள இந்திய தொழில் நுட்பக் கழகம் (ஐஐடி) புதிதாக நிறுவியுள்ளது. புதுமையான தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக பயனளிக்கும் மாதிரிகளை வடிவமைப்பதன் மூலம், சவாலான நீர்ப் பிரச்சனைகளுக்கு தெளிவான தீர்வுகளை இந்த மையம் வழங்கும். இந்தக் கருத் துக்கு சான்றாக, நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மாதிரித் திட்டம் செயல்படுத்தப் படும். அக்வாமேப் திட்டத்தின் முதன்மை ஆய்வாளரும், சென்னை ஐ.ஐ.டி.யின் திட்டப் பிரிவுத் தலைவருமான பேராசி ரியர் லிஜி பிலிப் வீடியோ பதிவின் மூலம் இந்தத் திட்டம் குறித்து அளித்துள்ள விளக்கத்தை பின் வரும் இணைப்பில் இருந்து பதி விறக்கம் செய்து கொள்ள லாம். https://drive.google. com/file/d/ 1sn3ShI2hqgc DyEkN2xeoCW_wQknmrXms/ vidw?usp =sharing முன்னாள் மாணவர்களின் தலைசிறந்த பங்களிப்புமுறை சென்னை ஐ.ஐ.டி.யின் முன்னாள் மாணவர்களான டாக்டர் பரசுராம் பாலசுப்பிரமணியன், சி.இ.ஓ., தீம் ஒர்க் அனலிடிக்ஸ் மற்றும் இடிஹாசா ரிசர்ச் அண்ட் டிஜிட்டல் தலைவர் கிருஷ்ணன் நாராயணன் ஆகியோர்,
இந்த முயற்சிக்கு தொடக்க நிலை நிதியுதவியாக 3 கோடி ரூபாயை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்க உறுதி அளித்திருப்பதுடன், ஐந்தாண்டுத் திட்டத்தை வடி வமைப்பதிலும் உதவி புரிந்துள்ள னர். இதுகுறித்து டாக்டர் பரசுராம் பாலசுப்ரமணியன் கூறுகையில், “நாட்டின் பெரும்பாலான நீர்ப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண, நுட்பமான மற்றும் பயனுள்ள மேலாண்மை நடைமுறைகள் தேவைப்படுகின்றன” என்றார். கிராமங்கள், நகரங்களில் புதிய நீர்த் திட்டங்களை அமைத்து, அவற்றை செயல்படுத்தும் போது ஏற்படும் நீர் சார்ந்த பெரும் சவால்களில் இருந்து நாம் அதிகம் கற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். சமூகம், தொழில், கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறை யில் சிறந்து விளங்குவோரை இணைத்துப் பணியாற்றச் செய் திருப்பதன் மூலம், வெற்றிகரமான தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரித் திட்டமாக அக்வாமேப் அமைந் துள்ளது என உறுதியாக நம்புதாக வும் தெரிவித்தார்.
சென்னை ஐஐடி.யின் கட்டடப் பொறியியல் துறையின் பேராசிரியர் லிஜி பிலிப் அக்வாமேப் திட்டத்தின் தலைமை ஆய்வாளராகப் பொறுப்பேற்று உள்ளார். நீர் பிரச்சனைகள் தொடர்பாகப் பணியில் ஈடுபட்டிரு க்கும் மேலும் 20 ஆசிரியர்கள், கட்டடப் பொறியியல், வேதி யியல், ரசாயனப் பொறியியல், மின் பொறியியல், இயந்திரப் பொறியியல், மேலாண்மை, மனித நேயம் மற்றும் சமூக அறிவியல் போன்ற வெவ்வேறு துறைகளை உள்ளடக்கிய பலரும் அவருக்கு உதவி புரிவார்கள். சென்னை ஐ.ஐ.டி. இயக்குநரைத் தலைவ ராகக் கொண்டு அக்வாமேப் ஆட்சி மன்றக் குழு அமைக்கப் பட்டுள்ளது. அத்துடன் நீர் தொழில்நுட்பம், நீர் மேலாண்மை, நீர்க் கொள்கை போன்ற துறைக ளில் மிகச் சிறந்து விளங்கும், புகழ் பெற்ற பலரைக் கொண்ட ஆலோ சனைக் குழு ஒன்றும் செயல் படும்.