tamilnadu

img

மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமரா: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை, மே 14- மாநகரப் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தொடங்கி வைத்தார். பெண் பயணிகளின் பாது காப்புக்காக மாநகர பேருந்துகளில் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்த  பிறகு நகரப் பேருந்துகளில் பெண் கள், திருநங்கையர்களுக்கு கட்ட ணம் கிடையாது என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதன் காரணமாக லட்சக்கணக்கான பெண்கள் பயன டைந்து வருகின்றனர். இந்நிலையில் பேருந்துகளில் பெண்களின் பாது காப்பை உறுதிசெய்ய புதிய வசதி கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை தலைமைச் செயல கத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், அவசர அழைப்பு பொத்தான்களின் செயல்பாடும் தொடங்கி வைக்கப்பட்டது. முதற்கட்டமாக 500 மாநகர பேருந்துகளில் கேமரா பொருத்தப் பட்டுள்ளது,

பொத்தான் வசதி அமல் நிர்பயா பாதுகாப்பான நகரம்  திட்டத்தின் கீழ் 2,500 பேருந்துக ளில் சிசிடிவி, அவசர அழைப்பு பொத் தான் பொருத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. மேலும், போக்கு வரத்துத் துறையில் பணியாற்றிய 136 பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் இந்த நிகழ்வில் வழங்கினார். இதில்,  போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் கலந்து கொண்ட னர். பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு மொபைல் செயலிகள் உள்ளன. ஆனாலும், அது செயல் பாட்டுக்கு எடுத்துக்கொள்ளும் நேரம்  மிக அதிகமாக இருக்கிறது. அத்துடன்  இல்லாமல் சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு எச்சரிக்கை சென்றடை வதற்குள் குற்றவாளி அந்த இடத்தி லிருந்து தப்பிச் செல்ல வாய்ப்பு உள்ளது. இந்த அபாய பொத்தான் மூலமாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம் என மக்கள் தெரிவிக்கின்றனர்.