tamilnadu

img

விலைவாசி உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் சிபிஐ மறியல்

சென்னை, செப். 12 - விலைவாசி உயர்வு, வேலை யின்மைக்கு காரணமான ஒன்றிய  அரசை கண்டித்து செவ்வாயன்று (செப்.12) தமிழகத்தின் பல்வேறு  பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், தேச  நலனுக்கும் குந்தகம் ஏற்படுத் தும் வகையில் ஒன்றிய அரசு  செயல்பட்டு வருகிறது. எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மாளிகை வழியாக போட்டி அரசு நடத்தி வருகிறது. இவற்றை கண்டித்து, ‘மோடி அரசே வெளியேறு’ என்ற முழக் கத்தை முன்வைத்து செப்.12, 13, 14 தேதிகளில் மறியல்  நடத்த இந்திய கம்யூனிஸ்ட்கட்சி அழைப்பு விடுத்தது. இதன் ஒருபகுதியாக வடசென்னை மாவட்டக்குழு சார்பில் சென்னை பாரிமுனை  அஞ்சலகம் முன்பு, கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தர சன் தலைமையில் மறியல் நடை பெற்றது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையி னர் கைது செய்தனர். தாராபுரத்தில் கே.சுப்பராயன் எம்.பி. தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் தேன்கனிக்கோட்டையில் டி.ராமச்சந்திரன், திருத்துறைப் பூண்டியில் க.மாரிமுத்து, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பி னர்கள் ஜி.பழனிசாமி, வை.சிவ புண்ணியம், எம்.ஆறுமுகம்,  கே.உலகநாதன் உள்ளிட்ட பல ரும் மறியலில் கைது செய்யப் பட்டனர். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய இரா.முத்தரசன், “மோடி அரசு இனியும் தொடர்ந் தால் நாட்டில் ஜனநாயகம் சீரழிக் கப்படும். நாட்டின் மதச்சார் பின்மை, அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கிய அமைப்பு களை காப்பாற்றவும் மோடி  அரசு உடனடியாக வெளியேற்றப் பட வேண்டும். அதற்கான முறை யில் தான் ‘இந்தியா’ கூட்டணி உருவாகி உள்ளது”என்றார். ‘இந்தியா’ என்ற மகத்தான கூட்டணியால் மோடி, அமித்ஷா  போன்றவர்கள் கதி கலங்கி உள்ள னர். ‘இந்தியா’ என்கிற நாட்டின் பெயரை, தன்னிச்சையாக பாரத்  என்று மாற்றி பிரதமர் செயல்படுகிறார். இது சர்வாதி கார நாட்டில் தான் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். ஜி20 மாநாடு விருந்துக்கு பிரதான எதிர்க்கட்சியான காங்கி ரஸ் கட்சி தலைவர் மல்லி கார்ஜூன கார்கேவை அழைக்க வில்லை. இது அப்பட்டமான ஜனநாயக விரோத செயல். நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும். மோடி வீட்டுக்கு அனுப் பப்படுவார்” என்றும் அவர் கூறி னார். மாநிலம் முழுவதும் நடை பெற்ற போராட்டங்களில் நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.