தஞ்சாவூர், ஜூலை 26 - தஞ்சாவூரில், ஞாயிறு மாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) சார்பில் ‘காவிப் பாசிச எதிர்ப்பு மாநாடு’ நடைபெற்றது. சிபிஐ(எம்எல்) மாநிலச் செயலாளர் என்.கே.நடராஜன் தலை மை வகித்தார். மாவட்டச் செயலாளர் டி.கே.கண்ணையன் வரவேற்றார். மாநாட்டில் பங்கேற்று அக்கட்சி யின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா பேசியதாவது: பாசிச அபாயத்துக்கு எதிராக, சித்தாந்த ரீதியான இயக்கத்தை, ஒருவர் முன்னெடுக்க வேண்டும். ஒரு அமைப்பாக இருந்தாலும், ஒரு தனி நபராக இருந்தாலும் சரி. சிலர் சிறைக்குள் இருக்கிறார்கள். சிலர் வெளியில் இருக்கிறார்கள். சிறைக்குள் இருந்தாலும், வெளியில் இருந்தாலும், சித்தாந்த ரீதியான எதிர்ப்பை பாசிச அபாயத்துக்கு எதிராக, ஒரு ஒன்றுபட்ட எதிர்ப்பை, ஒன்றுபட்ட விழிப்புணர்வை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இறுதியில் மக்களுக்குத்தான் அதிகாரம் என்பது உலக வரலாற்றிலே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இன்றை க்கு இலங்கையிலே ஜனாதிபதி, பிரதமர், எல்லாம் மக்கள் போராட்ட த்தின் முன்னால் மண்டியிட்டு, ஓடி கொண்டிருக்கக்கூடிய நிகழ்ச்சியை நாம் பார்க்கின்றோம். அதுபோல் இங்கே மக்கள் பலம் பெற வேண்டும். மக்கள் வீதிக்கு வரும்போது, மக்கள் போராட்டக் களத்துக்கு வரும்போது, மதவெறி பாசிச சக்திகள் ஓட ஓட விரட்டப்படு வார்கள்.
ஷாகின்பாக் போராட்டம் அதைத்தான் நமக்கு காண்பித்தது. விவசாய போராட்டத்தினுடைய வெற்றி அதைத்தான் காண்பித்தது. விவசாயப் போராட்டத்தின் வெற்றிக்குப் பிறகு கூட, இன்றைக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான கமிட்டி ஒன்றைப் போட்டு, அந்த வெற்றியை சீர்குலைக்கக் கூடிய, அந்த வெற்றிக்கு துரோகம் விளை விக்கக் கூடிய, முயற்சியை இந்த ஆட்சியாளர்கள் செய்கிறார்கள். பாசிசத்திற்கு எதிராக, ஒரு சக்திவாய்ந்த இயக்கத்தை கட்ட மைக்கத் தான் இடதுசாரிகள் உள்ளிட்ட வர்கள் ஓரணியில் திரண்டிருக் கிறோம். 2024ஆம் ஆண்டு தேர்தல் மிக முக்கியமானது. அதில் பாசிச சக்தி கள், தோற்கடிக்கப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தலிலே அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து ஒரு வேட்பாளரை நிறுத்தினோம். துணை ஜனாதிபதி தேர்தலிலே, திரிணாமுல் காங்கிரஸ், சில சிக்கல்களை உருவாக்கியது.
1942ல் வெள்ளையனே வெளி யேறு என்ற அறைகூவல் ஆகஸ்ட் மாதம் விடப்பட்டது. 2022ல் ஆகஸ்ட் மாதத்திலே, பாசிசமே நாட்டை விட்டு வெளியேறு. ஆர்எஸ்எஸ்சே நாட்டைவிட்டு வெளியேறு; கார்ப்ப ரேட் மயமாக்கமே நாட்டைவிட்டு வெளியேறு; சாதிய சக்திகளே, நாட்டைவிட்டு வெளியேறு என்று, நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து, உரத்த குரல் கொடுப்போம்; அதற்கான தருணம் தான் இது. இவ்வாறு அவர் பேசினார். இம்மாநாட்டில், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, சிபிஐ மாநில நிர்வாகி பெரிய சாமி, பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவர் சுப.உதயகுமார், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் விடு தலை அரசு, சிபிஐ - (எம்.எல்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வீ.சங்கர், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் சாமி.நடராஜன், மாவட்டச் செயலர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.