tamilnadu

img

அக். 11- டெல்டா மாவட்டங்களில் பந்த் விவசாயிகளுக்கு சிபிஎம் முழு ஆதரவு!

தமிழகத்திற்கு உரிய தண் ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டுமென வலி யுறுத்தி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் 11 அன்று நடைபெறும் பந்த் போராட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவை அறிவித்துள் ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தண்ணீரின்றி கருகிய பயிர்கள் காவிரி டெல்டா மாவட்டங்க ளில் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 அன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இம்முறை டெல்டா மாவட்டங்க ளில் 5 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பள வில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், காவிரியிலிருந்து தமிழ கத்திற்கு போதிய தண்ணீர் திறந்து  விடாததால் குறுவை சாகுபடி செய்துள்ள கடைமடை பகுதிக ளில் தண்ணீர் செல்லாமல் சாகுபடி செய்த பயிர்கள் கருகியுள்ளன.

வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள்

இதனால் விவசாயிகள் தங்க ளது வாழ்வாதாரத்தை இழந்து  பெரும் வேதனையில் மூழ்கியுள்ள னர். கருகிய பயிரைக் கண்டு நாகப் பட்டினத்தில் ஒரு விவசாயி அதிர்ச்சி யில் உயிரிழந்துள்ளார். காவிரி நடு வர் மன்றத் தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய தண் ணீரை திறந்து விட தொடர்ந்து மறுத்து வருவதுடன் அரசியல் சட்டத்தையும் மீறி செயல்படுகிறது. இப்பிரச்சனையில் ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகமாக தமிழகத்தை வஞ்சிக் கும் போக்கையே தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.

போராட்டத்திற்கு  சிபிஎம் முழு ஆதரவு

இந்நிலையில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் படியும், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டுமென வலியுறுத்தி யும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டி யக்கம் டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் 11 அன்று பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது.  தமிழகத்தின் நலன் காக்கும் இந்த வேலைநிறுத்தப் போராட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவினை தெரி வித்துக் கொள்கிறது. தமிழக விரோதப்  போக்கில் பாஜக உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின் படி கர்நாடக மாநில அரசு காவிரியி லிருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட வேண்டு மெனவும், ஒன்றிய பாஜக அரசு தமிழக விரோதப் போக்கை கை விட்டு விட்டு காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர் நாடக அரசு அமல்படுத்துவதற்கு போதிய நிர்ப்பந்தம் அளிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநி லச் செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.