tamilnadu

img

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட பசுமை மண்டலம்.. இது தெரியாத ஞான சூனியமா அண்ணாமலை ?

கோயம்புத்தூர், டிச. 1 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட் டம் கோவையில் நடைபெற்ற  நிலை யில், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  அதிமுக, பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டாலும் அதன் ‘பி’ டீமாகவே செயல்படுகின்றது. கடந்தமுறை கிடைத்த வாக்குகளை கூட எதிர்வரும் நாடாளு மன்றத் தேர்தலில்அதிமுகவால் பெற முடியாது. முத்தலாக், சிஐஏ, காஷ்மீர் விவகாரங்களில் அதிமுக எந்த எதிர்ப்பையும் தெரிவிக்க வில்லை. இப்போது சிறுபான்மை மக்களின் காவலன் என கூறி ஏமாற்றப் பார்க்கிறது. பாஜக மற்றும் அதிமுக-வினர் எவ்வளவு பிரச்சாரம் செய்தாலும் அது தமிழக மக்களிடையே எடுபடாது.  நடைபெற உள்ள தேர்தலில் கோவை உட்பட ஏற்கெனவே இருக்கும் இரண்டு தொகுதி களையும், தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை யின் போது திமுகவிடம் கேட்டுப் பெறுவோம், தொகுதி உடன்பாடு சுமூகமாக நடைபெறும். கூடுதலான தொகுதிகளை பெற வேண்டும் என்பது இயல்பான எதிர்பார்ப்பே. அதையும் வலியுறுத்துவோம்.

அண்ணாமலைக்கு சூடு

பாஜக அண்ணாமலை, திருத்துறைப்பூண்டி யில் தனது பிரச்சாரத்தை பற்றி தினமலரில் எழுதி யுள்ளார். தமிழக தொழில் வளர்ச்சிக்கு கம்யூ னிஸ்ட்கள்தான் தடை என்று அவதூறு பொழிந்துள்ளார். உண்மைக்கு மாறான விஷ யங்களை மோடி துவங்கி அண்ணாமலை வரை  பேசி வருகின்றனர். அண்ணாமலையின் மூளை க்கு எதுவும் தெரியாதா? காவிரி டெல்டா பகுதி என்பது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற ஞானமே இல்லாமல் ஞான சூனியமாக இருக்கின்றார். தமிழக வளர்ச்சிக்கு யார் அதிகம் பங்களித் திருக்கின்றனர், கம்யூனிஸ்டுகளா அல்லது பாஜகவா என பகிரங்கமாக விவாதிக்க அண்ணா மலை தயாரா? நெய்வேலி, திருச்சி ‘பெல்’ நிறு வனம் உள்பட தமிழகத்தின் தொழில் வளர்ச்சி க்கு கம்யூனிஸ்டுகள் ஆற்றிய பங்கு வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதைப் பற்றி அண்ணாமலைக்கு என்ன தெரியும்? சிறுகுறு தொழில் முனைவோரின் நலன் கருதி தமிழ்நாடு அரசு மின் கட்டண உயர்வை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும், வேறு பல மாநிலங்களுக்கு தொழில்கள் இடம்மாறும் நிலை இருப்பதை கருத்தில் கொண்டு தொழில் முனைவோரிடம் பேச்சு வார்த்தை நடத்தி தொழில் கடன்களை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.  விவசாயிகளின் மீது குண்டர் சட்டம் போடக் கூடாது என்பதை மாநில அரசிடம் வலியுறுத்தி குண்டர் சட்டத்தின் கீழான வழக்கை ரத்து  செய்ய வைத்தோம். விவசாயப் போராட்டத்தை முன்னெடுத்த அருள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தையும் வாபஸ் பெற வேண்டும்.  திமுக கொடுத்திருக்கும் வாக்குறுதிகளில் பல நிறைவேறியுள்ளன. இன்னும் சில நிறைவேற்ற வேண்டியுள்ளது. போக்குவரத்து ஊழியர் ஊதிய விவகாரம், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நீண்ட நாள் கோரிக்கை கள் நிறைவேற்றப்பட வேண்டும். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் கூறினார்.  இந்த செய்தியாளர் சந்திப்பின்போது அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், கோவை மாவட்ட செயலாளர் சி. பத்மநாபன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.