திருநெல்வேலி, ஜூன் 27- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்டக் குழு அலுவலகத்தில் சாதிய மறுப்பு திருமணம் நடைபெற் றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு அலு வலகத்தில் சாதிய மறுப்பு திருமணம் மாவட்டச் செய லாளர் க.ஸ்ரீராம் தலைமை யில் செவ்வாய்க் கிழமை யன்று நடைபெற்றது. இதில் முன்னீர் பள்ளத்தைச் சேர்ந்த மணமகன் மதன் சுந்தர், மண மகள் கரீஷ்மா ஆகியோரது திருமணம் சிறப்பாக நடத்தி வைக்கப்பட்டது, மணமக் களை வாழ்த்தி சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.மோகன், எம். சுடலைராஜ், பெருமாள், துரைராஜ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் கு.பழனி,ஆர்.முருகன், ஜோதி பாளையங்கோட்டை தாலுகா செயலாளர் முத்து சுப்பிரமணியன் மேலப் பாளையம் பகுதிக் குழு செயலாளர் குழந்தைவேல் ஆகியோர் பேசினர். திருமண விழாவில் மண மகன் வீட்டார்கள், அரசு போக்குவரத்துக் கழக சங்கிலி பூதத்தான், முன்னீர் பள்ளம் ஊர் பிரமுகர் கிருஷ் ணன் மற்றும் முக்கிய பிர முகர்கள் கலந்து கொண்ட னர்.