tamilnadu

img

கோவை காவல் ஆணையருடன் தகராறு: ஆர்எஸ்எஸ் குண்டர்கள் மீது வழக்கு பதிவு

கோவை , ஜன. 1  -  கோவையில் காவல் ஆணையரை பணி செய்ய விடாமல் தடுத்து , ரகளையில் ஈடுபட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாவட்ட செயலாளர் முருகன் உட்பட 5 பேர் மீது போலீசார்  வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை விளாங்குறிச்சியில் தனியார் பள்ளி ஒன்றில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. கோவையில் மதமோதலை ஏற்படுத்த திட்டமிட்டு நடத்தப்படும் இந்த பயிற்சி முகாமிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு முற்போக்கு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய வெள்ளியன்று கோவை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஜெயச்சந்திரன் வந்திருந்தார். ஆனால், காவல் துணை ஆணையரையே பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்க மறுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அவரை கண்டித்து  முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து தேவையில்லாமல் திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்திய ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத் துவ அமைப்பினரை பள்ளி வளாகத்திற்குள் செல்லுமாறு காவல் துணை ஆணையர் ஜெய சந்திரன் அறிவுறுத்தினார்.

ஆனால், இதனையும் மிறி அவர்கள் பள்ளி வளாகத்திற்குள் செல்ல மறுத்து துணை ஆணையர் ஜெயசந்திரனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அங்கிருந்த காவல்துறையி னருடனும் ரகளை செய்து தாக்க முயன்றனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் காவல் துணை ஆணையர் ஜெயசந்திரன் நிலை தடுமாறி கீழே விழ முயன்றார். இவரை அரு கிலுள்ள காவலர்கள் பத்திரமாக மீட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவவே அங்கிருந்து காவல் துணை ஆணையர் ஜெயசந்திரன், வேறு வழியின்றி பள்ளிக்குள் செல்ல முடியாமல் திரும்பிச் சென்றார். இந்நிலையில், இது தொடர்பாக பீளமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜ்குமார் அளித்த  புகாரின் பேரில் ஆர்எஸ்எஸ் மாவட்ட செயலாளர் முருகன், பாஜகவை சேர்ந்த காளிதாஸ், இந்து முன்னணியைச் சேர்ந்த கோவிந்தன், ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த அருண், கருப்பசாமி ஆகிய 5 பேர் மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் ஆகிய இரு பிரி வுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.