tamilnadu

ஓபிஎஸ்-இபிஎஸ் மீதான வழக்கு தள்ளுபடி

சென்னை,டிச.14- அதிமுக தேர்தலில் ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை  ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வானதை எதிர்த்துத் தாக்கல் செய்யப் ்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடத்தப் ்படும் என அறிவிக்கப்பட்டது. அதிமுக கட்சி  விதிப்படி 21 நாட்கள் அவகாசம் வழங்கா மல் தேர்தல் நடத்தப்படுவதால், தேர்தல் முடிவுகளை அறிவிக்கத் தடை கோரி ஓசூரைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் ஜெயச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வானது, அதிமுக உட்கட்சித் தேர்தலைத் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது எனத் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், உட்கட்சித் தேர்தலில் தலையிட்டுக் கண்காணிக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடி யாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.