விடுதலைப் போராட்ட வீரர்களைக் கொண்ட தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு ஒன்றிய பாஜக அரசு அனுமதி மறுத்ததைக் கண்டித்தும் விடுதலை வீரர்களின் தியாகத்தைப் போற்றும் விதமாகவும் தமிழகம் முழுவதும் குடியரசுத் தினத்தன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், விடுதலை வீரர்களின் பதாகைகளை ஏந்தி பேரணி நடத்தியது. தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ் தலைமையில் தரமணியில் நடைபெற்ற ரத ஊர்வலத்தில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, துணைச் செயலாளர் சுசீந்திரா, மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, பொருளாளர் திவாகர் உள்ளிட்டோர் பேசினர்.