மதுரை, டிச.15 - பிரதமர் நரேந்திர மோடிக்கு வேதத்தின் மீது இருக்கும் விசு வாசத்தை விட வேதாந்தா நிறுவனத் தின் மீது இருக்கும் விசுவாசம் அதி கம் என்று சு.வெங்கடேசன் எம்.பி. சாடினார். மேலூர் பகுதியில் டங்ஸ் டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற் கான உத்தரவை ஒன்றிய அரசு ரத்து செய்யாவிடில், ஏல ஒப்பந்த உத்த ரவு நகல் மற்றும் கனிமம் எடுப்ப தற்கான ஒன்றிய அரசின் சட்டத் திருத்த நகலையும் எரிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் கிழக்குத் தாலுகாக்களில் அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, ஏ. வல்லாளபட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் டங்ஸ்டன் கனிம வளச் சுரங்கம் அமைப்பதற்காக வேதாந்தாவின் துணை நிறுவனத் திற்கு ஒன்றிய அரசு ஏலம்விட்டதைக் கண்டித்தும், உடனடியாக ரத்து செய்திடக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புற நகர் மாநகர் மாவட்டக் குழுக்கள் சார்பில் மேலூர் பேருந்து நிலை யம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை மதுரை மக்க ளவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைத்து கட்சியின் மாநிலச் செயற் குழு உறுப்பினர் கே.சாமுவேல் ராஜ் பேசினார். கோரிக்கையை வலி யுறுத்தி கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாந கர் மாவட்டச் செயலாளர் மா.கணே சன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, மேலூர் தாலுகாச் செயலா ளர் எ.தனசேகரன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் என்.பழனிச்சாமி ஆகியோர் பேசினார்கள். இந்தப் போராட்டத்தில் கட்சி யின் மாநிலக் குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மதுரை மாநகராட்சித் துணை மேயர் தி.நாகராஜ், வாலி பர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பி. இளங்கோவன், கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.மாயா ண்டி, எம்.கண்ணன், பி.எஸ்.ராஜ மணி, கிழக்குத் தாலுகாச் செயலா ளர் எம்.கலைச்செல்வன் உட்பட கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப் பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர் கள், இடைக்கமிட்டிச் செயலாளர் கள், சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் மற்றும் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், நிர் வாகிகள் மற்றும் பொதுமக்கள் என 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சு.வெங்கடேசன் எம்.பி., உரை பக்கம் : 3