சென்னை, பிப். 7 - நீதிபதி விக்டோரியா கௌரியின் நியமனத்தை ரத்து செய்யக்கோரி பிப்ரவரி 7 செவ்வாயன்று சென்னை உயர்நீதிமன்றம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர்கள் விக்டோரியா கௌரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராம கிருஷ்ணன், மாவட்ட நீதிபதிகளான ஆர்.கலைமதி, ஜி.திலகவதி ஆகி யோர் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்ட னர். இவர்களுக்கு சென்னை உயர்நீதி மன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார். இதில், பாஜக பிரமுகரான விக்டோரியா கௌரி நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர்கள் குடியர சுத் தலைவருக்கு கடிதம் அனுப்பினர். அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகளும் இந்த நிய மனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், விக்டோரியா கௌரி நியமனத்தை ரத்து செய்ய வலி யுறுத்தி மூத்த வழக்கறிஞர்கள் தொடுத்த வழக்கை பிப்ரவரி 7 அன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ்கண்ணா, கவாய் அமர்வு வழக்கை தள்ளுபடி செய்தது.
வழக்கறிஞர்கள் போராட்டம்
இதனிடையே சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது, விக்டோரியா கௌரியின் நியமனத்தை திரும்பப்பெற வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் உயர்நீதிமன்றம் வளாக வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் வழக்கறிஞர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.சிவக்குமார் கூறுகை யில், “சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சுகளை சமூக வலை தளங்களில் பதிவிட்டு வந்தவர் விக்டோரியா கௌரி. அவரை நீதிபதி யாக கொலீஜியம் பரிந்துரை செய்தி ருப்பது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும், மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும் எதி ரானது. நீதிபதிகள் நியமனத்தில் கொலீ ஜியம் வெளிப்படைத் தன்மையுடனும், மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையிலும் செயல்பட வேண்டும். விக்டோரியா கௌரி போன்றவர் களால், நீதிமன்றத்திற்கு வரும் சிறு பான்மை மக்களுக்கு நீதி கிடைக்கா மல் போகும்” என்றார். இந்த போராட்டத்தில் மாநில துணைத்தலைவர் இளங்கோ, சம்கிராஜ், மாவட்டச் செயலாளர் சீனி வாசன், தலைவர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வெறுப்பை விதைப்பவர் நீதிபதியா?
இதனைத் தொடர்ந்து உயர்நீதி மன்றத்திற்கு எதிரே மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் துறைமுகம் பகுதிச் செயலாளர் ஜலாலுதீன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‘விக்டோரியா கௌரி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்’, ‘நீதிபதி களை நியமிக்க தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்க வேண்டும்’ என போராட்டத்தில் முழக்கமிட்டனர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, “தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் கருத்துக்களை கேட்காமல் உச்சநீதிமன்ற கொலீஜியம் செயல்படுகிறது. ஆர்எஸ்எஸ் நபரான விக்டோரியா கௌரி, தினசரி சமூக வலைதளங்களில் பாஜகவின் வெறுப்பு பிரச்சாரத்தை செய்து வருபவர். அரசியலமைப்பு சட்டம் முன்மொழிந்த மதச்சார்பின்மையை, மக்கள் ஒற்றுமையை சிதைக்கக் கூடி யவராகவும் அவர் இருக்கிறார். அர சியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுபவரை எவ்வாறு நீதிபதி யாக நியமிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார். “வழக்கறிஞர் ஜான் சத்யனை, உயர்நீதிமன்ற நீதிபதியாக கொலீ ஜியம் பரிந்துரை செய்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக அவர், ஒரு டிவிட்டை, ரீடிவிட் செய்ததற்காக அந்த நிய மனத்தை ஒன்றிய சட்ட அமைச்சகம் ரத்து செய்தது. அதே சட்ட அமைச்சகம் பாஜக மகளிர் அணி நிர்வாகி, மதவெறி பிரச்சாரம் செய்துவரும் விக்டோரியா கௌரியை நீதிபதியாக நியமனம் செய்ய எப்படி ஒப்புதல் அளிக்கிறது? வெறுப்பை விதைக்கும் அவர், நியாயமான தீர்ப்பை வழங்கு வாரா? ” என்றும் கேள்வி எழுப்பினார். இந்த போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.முரளி, எஸ்.கே.முருகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.