tamilnadu

img

வேறெங்காவது காண முடியுமா? - எம்.அகமது உசைன்

கண்ணூரில் ஓர் அகில இந்திய மாநாடு. அலங்கார வரவேற்பு வளைவுகள் இல்லை. அதற்காக தோண்டப்படும் பெரும் தூண்கள் சாலையின் இருபக்கமும் இல்லை.  அப்படி முப்பது வளைவுகள் போட்டால் 240 பெரும் துளை கள் தோண்ட வேண்டும்; முடிந்த பிறகு மூட மாட்டோம். அதில் விழுந்து அடிபடுவார்கள்; மரணத்திற்கும் வாய்ப்புண்டு நம்மூரில். எங்கும் கட் அவுட் இல்லை.  ஆனாலும் சிறப்பான அலங்காரம் கண்கொள் ளாக்காட்சியாக அசத்தியது. ஆம் இந்திய கம் யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்)கட்சியின் 23 - ஆவது மாநாடு இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. கண்ணூர் நகர மக்களுக்கு எந்த இடையூறும் இல்லை. போக்கு வரத்து மாற்றப்படவில்லை. எல்லோரும் இயல்பா கவே சென்று வருகின்றனர். மாநாடு தினமும் முடிகிற நேரம் மட்டும் வாகன நெருக்கடி ஏற்படும். அதுவும் யாருக்கும் வலிக்கவில்லை. 

பரபரப்பு, பந்தாக்கள் இல்லை. நேரந்தவறாமை முக்கியம். அனைத்து பிரதிநிதிகளுக்கும் ஒரே சட்டமும் விதியுந்தான். ஒரே சாப்பாடு தளம். தாங்களா கவே உணவெடுத்து உண்ண வேண்டும். தட்டை யும் தாங்களே கொண்டு வைக்க வேண்டும். அவர்க ளில் ஒரு முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர், ஒரு சபாநாயகர், மூன்று முன்னாள் சபாநாயகர் கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஏராளமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர்கள், முன்னாள் மேயர்கள், உள்ளாட்சியின் அனைத்துமட்ட தலைவர்கள், வாரிய தலைவர்கள் என அது உண்மையான சமத்துவபுரம். அனைவரை யும் கவனித்து உபசரித்தது நூற்றுக்கணக்கான பாலர் சங்கத்தை சார்ந்த இளம் குழந்தைகள் ஆணும் பெண்ணும்.

கண்ணிலுண்ணி!

ஏப்ரல் 6 காலை கண்ணூரில் மார்க்சிஸ்ட் கட்சி யின் அகில இந்திய மாநாடு துவங்கியது. மாநாடு நடைபெறும் அரங்கின் வாயிலில் (முன்னாள் முதலமைச்சர் இ.கே. நாயனார் அகாடமி வளாகம்) மாநாடு முடிந்த ஏப்ரல் 10 வரை ஒவ்வொரு நாளும் ஏராளமான ஆண்களும் பெண்க ளும் குழந்தைகளும்  குழுமி வைத்த கண் வாங்கா மல் நெருக்கியடித்துக்கொண்டு நிற்பார்கள் குடும் பத்துடன். இரவு 11 மணிக்குப் பிறகும் நிற்கிறார்கள். சாலையின் இருமருங்கிலும் அவர்கள் வந்த  கார்க ளும் இருசக்கர வாகனங்களும் ஒரு கி.மீ- க்கு நிற்கும். தலைவர்களை, பிரதிநிதிகளைக் கண்டால் கோஷம் போடுகிறார்கள். வயதான தலைவர்கள்  காரிலிருந்தபடியே கையசைத்துச் செல்கிறார்கள்.

இளம் தலைவர்கள் காரில் வரும்போது அவர்க ளிடம் கேட் வாசலில் நிற்கிற செந்தொண்டர்கள், வாலிபர்கள், காரிலிருந்து இறங்கி வரச்சொல்லி அவர்களும் நடந்து வருகிறார்கள். நூற்றுக்கணக்கான  செல்போன்க ளின் வெளிச்சத்தில் மிதந்து சுமார் அரை கி.மீ.வரை அந்த தலை வர்களின் தோள்மீது கைகளைப் போட்டு செல்பி எடுக்கிறார்கள். அந்தத்தலைவர்கள் அவர்களின் கண்ணிலுண்ணியாம். அதாவது கண்ணின் உள்ளி ருக்கும்கருவிழியாம். காவல்துறைக்கு எந்த வேலை யுமில்லை. அருகாமையில் எங்கும் காணவில்லை. உள்ளேயும் வெளியேயும் ஒருசிலர் உட்கார்ந்து இருந்தனர்.அதிலும் பாதிப்பேர் தீயணைப்பு துறையை சார்ந்தவர்கள். கண்ணூர் மாநாட்டுக் காட்சிகளை, வேறெங்காவது, எந்தக் கட்சியின் மாநாட்டிலாவது காண முடியுமா?

கட்டுரையாளர் : சிபிஎம் குமரி மாவட்ட செயற்குழு உறுப்பினர்.