tamilnadu

img

5 நிறுவனங்கள் தொடங்க அமைச்சரவை ஒப்புதல்

சென்னை,மே 2- கேட்டர்பில்லர், பெட்ரோ னஸ் உள்ளிட்ட 5 வெளி நாட்டு நிறுவனங்கள் தமிழ் நாட்டில் தொழில் தொடங்க முதல்வர் ஸ்டாலின்  தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில்  ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள தாக தகவல் வெளியாகி யுள்ளது. தமிழ்நாடு முதல்வர்  தலைமையில் செவ்வா யன்று (மே 2)காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், 5  வெளிநாட்டு நிறுவனங் கள் தொழில் தொடங்கு வதற்கான நிர்வாக ஒப்புதல்  அளிக்கப்பட்டது. கேட்டர் பில்லர், மலேசியாவைச் சேர்ந்த பெட்ரோனஸ் நிறுவனம் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான ஒப்பு தல் வழங்கப்பட்டதாக கூறப் படுகிறது. மேலும், குடியரசுத்  தலைவர் வருகை, மதுரை யில் திறக்கப்படவுள்ள கருணாநிதி நூற்றாண்டு நினைவு நூலகம், திருவாரூ ரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடு கள் மற்றும் கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.