பர்கினா பாசோவில் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ராணுவ ஆட்சி அமைக்கப்பட்டுள்ளதில் அமெ ரிக்காவுக்கு தொடர்புள்ளதாகக் கருதப்படுகிறது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பர்கினா பாசோவும் ஒன்றாகும். கடந்த ஆண்டு டிசம்பரில் ராணுவ அதிகாரி பால் ஹென்றி சண்டாகோ தமிபாவை ராணுவத் தளபதிகளில் ஒருவராக ஜனாதிபதி ரோச் கிறிஸ்டியன் கபோரே நியமித்தார். நவம்பர் 2021இல் நடந்த தாக்கு தல் ஒன்றில் 49 ராணுவ அதிகாரிகளும், பொது மக்க ளில் நான்கு பேரும் கொல்லப்பட்டனர். இதனால் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். மக்களின் கொந்தளிப் பைத் தணிக்க, தமிபாவை நியமித்து அவர் பிரச்சனையைக் கட்டுக்குள் கொண்டு வருவார் என்று ஜனாதிபதி அறி வித்தார். தமிபா ராணுவத் தளபதிகளில் ஒருவராகப் பொ றுப்பேற்றுக் கொண்ட ஏழு வாரங்கள் கழித்து ஒரு நாள் திடீரென்று தேசிய தொலைக்காட்சியில் தோன்றினார். முழு ராணுவ உடையில் உரையாற்றிய அவர், ஜனாதிபதி பதவியில் இருந்து கபோரே நீக்கப்பட்டதாகவும், நாட்டின் அரசியல் சட்டம் முடக்கப்பட்டதாகவும் அறிவித்தார். தளபதிகளில் ஒருவராகப் பொறுப்பேற்ற ஏழே வாரங்க ளில் நாட்டின் ஆட்சியாளராக தமிபா மாறினார். அவரை நியமித்த கபோரே தற்போது சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்.
அமெரிக்கப் பின்னணி
2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் அமெரிக்காவில் நடந்த பல ராணுவப் பயிற்சித் திட்டங்களில் தமிபா பங்கேற்றிருக்கிறார். இந்தப் பயிற்சிகளுக்குப் பிறகுதான் ஜனாதிபதி கபோரே அவரை தளபதிகளில் ஒருவராக நியமித்தார். மத அடிப்படை வாதிகளை முறியடிப்பதே தனது முதல் நடவடிக்கையாக இருக்கும் என்று தமிபா அறிவித்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்காவின் சில நாடுகளில் இதே காரணத்தைச் சொல்லி பிரான்ஸ் தனது படைகளை நிறுத்தியிருக்கிறது. வெளிநாட்டுப் படைகளின் உதவி மிகவும் அத்தியா வசியம் என்றும், அதன் மூலம்தான் தற்போதுள்ள நெருக்கடியிலிருந்து உடனடியாக மீள முடியும் என்றும் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிபா கூறியுள்ளார். ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் உதவியைப் பெறுவதைப் பற்றி இதற்கு முந்தைய ஆட்சியாளர்க ளும், ராணுவ அதிகாரிகளும் பேசி வந்தனர். எந்த நாட்டின் உதவியைப் பெறுவது என்பது பற்றி தமிபா வெளிப்படையாகக் கூறவில்லை. அமெரிக்க ராணுவத்து டன் அவருக்குள் இருக்கும் நெருக்கம், பர்கினா பாசோவில் அமெரிக்க ராணுவம் வந்திறங்குவதில் முடியலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.