tamilnadu

img

ஜெய்பீம் படக்குழுவினர் மீது வழக்கு

சென்னை, மே 5 - ஜெய்பீம் திரைப்படம்  தொடர்பாக தயாரிப்பா ளர்கள் சூர்யா, ஜோதிகா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய சைதாப்பேட்டையில் உள்ள சென்னை பெரு நகர குற்றவியல் நடுவர்  நீதிமன்றம் உத்தர விடுள்ளது. ‘ஜெய்பீம்’ திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியக்கோரி வேளச்சேரி காவல்நிலையததில் ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் தலைவர் சந்தோஷ் நாயகர் புகார் கொடுத்திருந்தார். அதன்மீது காவல்துறை வழக்கு பதிய மறுத்துவிட்டது. இந்நிலையில் சைதாப் பேட்டை நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், ‘ஜெய்பீம்’ படம் தேசப் பிரிவினையை ஏற்படுத்துவதோடு, சாதி, மத கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது. இந்து வன்னியர் சமூக மக்களை புண்படுத்தும் வகையில் காட்சி அமைப்புகள் உள்ளன. எனவே, தயாரிப்பாளர் கள் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல், கலை இயக்குநர், மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ் டோபர், கவசம் கிளாரட் சபை ரபேல்ராஜ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த  சைதாப்பேட்டை நீதிமன்றம்,  கடந்த 2021ம் ஆண்டு டிச.8ல் அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். முதல் தகவல் அறிக்கையை மே 20ந் தேதி  தாக்கல் செய்ய உத்தர விட்டது.