tamilnadu

img

மதுரையில் பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, மே 15- பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் அவுட் சோர்சிங் டெண்டரை அமல்படுத்தாதே, அவுட்சோர்சிங் அமலாக்கப்படுவதற்கான ஆணையை ரத்து செய்ய வேண்டும். ஊழி யர் பற்றாக்குறை நிலவும் சமயத்தில் ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யாதே. 10 மாதம் முதல் 15 மாத சம்பள நிலுவை தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று கோரி கண்ணில் கருப்பு துணி கட்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பீ.பீ. குளம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் முருகேஷ் பாபு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மதுரை கோட்டச் செயலாளர் செல்வின் சத்தியராஜ், ரிச்சர்ட் ஆகியோர் பேசினர், தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் குமார் நன்றி கூறினார். பிஎஸ்என்எல் ஊழியர் ஓய்வூதியர் சங்க நிர்வாகி ஆர். சண்முகவேல், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க உதவிச் செயலாளர் உமா தியாகராஜன், ஆர். சுப்புராஜ், ஒப்பந்த தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் சோனை முத்து உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.