சென்னை, பிப். 20- அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் பி.எஸ்.சி, எம்.எல்.டி. பயிற்சியை துவக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கம் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரக வளாகத்தில் திங்களன்று (பிப். 20) பெருந்திரள் முறையீடு நடைபெற்றது. விருதுநகர், ராமநாத புரம், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்டு புதிதாக பிப்ரவரி 2021ல் அறிவிக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கான 341 ஆய்வக நுட்பனர் நிலை இரண்டு பணியிடங்களை ஒப்பந்த பணியிடங்களாக அறிவித்துள்ளதை நிரந்தர காலமுறை பணியிடங்க ளாக அறிவித்து தேர்வாணை யம் மூலம் சமூக நீதி பாது காப்புடன் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியம னம் செய்ய வேண்டும். உயர் நீதிமன்ற தீர்ப்பின் படி மாநிலத் தழுவிய நிலை 2 நுட்பனர்களின் முதுநிலை பட்டியல்படி நடைபெற்ற நிலை 1 பதவி உயர்வு கலந்தாய்வு பணி நியமனங் களை முழுமைப்படுத்த வேண்டும். அரசாணை 131 இன் படி முதுநிலை பட்டியல் வெளியிடும் நிர்ணயிக்கப் பட்ட தேதிக்கு மிக அரு காமையில் பணி நிறைவு பெறும் நிலை 1 பணியிடங் களையும் பட்டியலிட்டு நிலை 1 காலிப்பணியிடங்க ளில் இணைத்து பதவி உயர்வு வழங்க வேண்டும்,
பட்டியலில் விடுபட்டுள் ளோரை இணைக்க வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் மா.செல்வகுமார் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் வீ.பார்த்தசாரதி கோரிக்கைகளை விளக் கிப் பேசினார். முன்னாள் மாநில பொதுச் செயலா ளர் கோ.சுகுமார் போராட் டத்தை நிறைவு செய்து பேசினார். மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.ந.நம்பிராஜன், அரசு அனைத்து மருந்தாளுநர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.விஜயகுமரன், ரேடியாலஜிக்கல் அசிஸ்டண்ட் அசோசியே ஷன் பொதுச் செயலாளர் ர.ஈஸ்வரன், கண் மருத்துவ உதவியாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் க.அன்பழகன், எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் து.அஸ்வினி உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர். பின்னர் சங்க நிர்வாகி கள் துணை மருத்துவக் கல்வி இயக்குநர் பிரேம்கு மாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது ஒரு வாரத்திற்குள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தை துறை சார்ந்த கோரிக்கைகளுக்கு தீர்வுகாணப்படும் என்றும் பிற கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.