tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அரசியல் நெருக்கடி கார ணமாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை இடைக் கால பிரதமராக தொடர உள்ளதாகவும் கூறியுள் ளார். (விபரம்:6)

அமெரிக்காவின் தெற்கு  டகோட்டா மாகாணம் மோசமான வானிலை யால் இயல்பு நிலையை இழந்துள்ளது. அங்கு வாழும் மக்கள் என்ன நடக்கிறது என்பது தெரி யாமல் தவித்து வருகின்ற னர். தெற்கு டகோட்டா வை புயல்கள் அடுத்தடு த்து கடந்து சென்றது. ஆலங்கட்டி மழையும், அதி பயங்கர காற்றும் கூட வீசி மாகாணத்தின் முக்கிய பகுதிகளை புரட்டியெடுத்தது. இந்த  சம்பவங்களின் பதற்றம்  தணிவதற்குள் வானம் திடீரென பச்சை நிறத்தில் மாறி பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. வானம் பச்சை நிறத்தில் மாறிய சில மணி நேரத்திலேயே அங்கு அதி தீவிர கன மழை பெய்யத் தொடங்கி யது. பல இடங்களில் சுமார் 120 மிமீ மழை வெளுத்து வாங்கியது. 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர் பாக மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமியின் மகன் செந்தில் குமாரிடம் தனிப் படை போலீசார் விசார ணை நடத்தினார். 2017- ஆம் ஆண்டு சோதனை யில் கைப்பற்றிய ஆவ ணங்கள் கொடநாடு பங் களாவிலிருந்து திருடப் பட்டதா என்ற சந்தேகத் தின் அடிப்படையில் செந்தில் குமாரிடம் விசா ரணை மேற்கொள்ளப் பட்டதாக தனிப்படை போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். அதிமுக ஆட்சியில் மாநிலம் முழு வதும் ஆறுகளில் மணல் எடுக்கும் ஒப்பந்தத்தை பெற்றவர் ஆறுமுகசாமி.

கேரளா மாநிலம் திருச் சூரிலுள்ள ஆயந்தோல் எஸ்.என்.பார்க் அருகே கடந்த புதன்கிழமை 11 மற்றும் 5 வயதுடைய இரண்டு சிறுமிகளிடம் ஆபாச சைகை மற்றும் ஆபாசமாக நடந்து கொண்டதாக நடிகர் ஸ்ரீஜித் ரவியை திருச்சூர் மேற்கு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஸ்ரீஜித் தமிழில் கும்கி, மதயானை கூட்டம் படத்தில் நடித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் ஔ  ரங்காபாத், உஸ்மானா பாத் மாவட்டங்களின் பெயரை மாற்ற அம்மாநில அரசு எடுத்த முடிவிற்கு பாந்த்ரா தொகுதியின் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ அபு அசிம் ஆஸ்மி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் நாசிக் மற்றும் புனேவில் ஆகிய பகுதிகளிலிருந்து ஆஸ்மி க்கு மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 35 விழுக்காடு அளவுக்கு உக்ரைனின் பொருளாதார சரிவு இருக்கும் என்று அந்நாட்டு அதிகாரப்பூர்வப் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இந்த சரிவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருக்கும் என்று அரசு புள்ளிவிபர சேவைத்துறை கூறியுள்ளது. கடந்த ஆண்டில் முதல் காலாண்டோடு ஒப்பிடுகையில் 15.1 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது. மேற்குப்பகுதி வழியாக வர்த்தகத்தை மேற்கொள்ளும் பணிகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கொலம்பியா மற்றும் வெனிசுலா எல்லைப்பகுதியில் உள்ள ஆயுதந்தாங்கிய குழுக்களை அப்புறப்படுத்துவதே தற்போதுள்ள முன்னுரிமைப்பணி என்று கொலம்பியாவின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கும் குஸ்தவோ பெட்ரோ கூறியுள்ளார். வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த அவர், “சட்டவிரோதமாக இரண்டு நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் இயங்கி வரும் ஆயுதந்தாங்கிய குழுக்களை அப்புறப்படுத்துவதே நமக்கு முக்கியம்” என்று தெரிவித்திருக்கிறார்.

ஆப்பிரிக்க நாடுகளில் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி 11 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய உதவி அமைப்பு கூறியுள்ளது. வரலாறு காணாத அவசர நிலை இந்த நாடுகளில் காணப்படுகிறது என்றும், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள இந்த நாடுகளில் உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உதவி அமைப்பு கோரியிருக்கிறது.