கண்ணூர், மார்ச் 2- ஒன்றிய அரசின் அழுத்தத்தின் காரணமாக முக்கிய ஊடகங்கள் உண்மையை மூடி மறைக்கின்றன; ஊடகங்கள் பொய்யான செய்திகளை உருவாக்கும் தொழிற்சாலைகளாக மாறிவிட்டன என்று பிருந்தா காரத் கூறினார். சிபிஎம் 23-ஆவது அகில இந்திய மாநாட்டின் யூடியூப் சேனலை ஆன்லைனில் சிபிஎம் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் திங்களன்று (பிப்.28) துவக்கிவைத் தார். அப்போது அவர் பேசுகையில், “பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு கள் அரசியல் சட்டத்திற்கு விரோத மான ஜனநாயக விரோத நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளது. அதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி போராடி வருகிறது. புகழ் பெற்ற விவசாயிகள் போராட்டத்தின் முன் ஒன்றிய அரசு மண்டியிட வேண்டி யதாயிற்று. குடியுரிமைச் சட்டத் திருத்தத் துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்தச் சட்டத்தை அமல்படுத்தமாட் டோம் என்று அறிவித்த ஒரே மாநிலம் கேரளா என்பதில் பெருமை கொள்ள லாம்.
ஆர்எஸ்எஸ் கையாளும் மநு வாதத்தின் சமூக தாக்கமே ஹிஜாப் சம்பவம். கார்ப்பரேட் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலுக்கு கூடுதலாக, அது இந்தியாவை விற்க முயற்சிக்கிறது. இங்குதான் கேரளாவில் எல்.டி.எப் அரசு முன்மாதிரியாகிறது. கட்சியை வலுப்படுத்துவதும் இடதுசாரிகளை வலுப்படுத்துவதும் கட்சி அகில இந்திய மாநாட்டின் முன் உள்ள கடமை. சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், இடதுசாரிகளின் மாற்று வளர்ச்சிப் பார்வைக்காகவும் கட்சி மற்றும் அதன் செயல்பாட்டாளர்கள் செய்த தியா கங்களை யூடியூப் சேனல் மூலம் உலகுக்குக் கொண்டு வர முடியும்” என்று பிருந்தா காரத் கூறினார். இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் வி.சிவதாசன் எம்.பி தலைமை வகித்தார். கண்ணூர் மாவட்டச் செயலர் எம்.வி.ஜெய ராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.ஹரீந்திரன், என்.சுகன்யா, நவீன ஊடகக் குழு ஒருங்கி ணைப்பாளர் பி.சந்தோஷ் ஆகியோர் பேசினர்.