tamilnadu

வியாழன் தோறும் பூஸ்டர் தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை, ஜன. 18- தமிழகத்தில் வியாழக்கிழமை தோறும்  பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்  நடைபெறும் என்றும் பொங்கல் பண்டிகை யால் கொரோனா பாதிப்பு உயருமா? என்பது இரண்டு நாட்களில் தெரியவரும் எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரி வித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இல்லம் தேடி பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்தும் பணியை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தொடங்கி வைத்தார். அப்போது, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணை யர் ககன்தீப் சிங் பேடி ஆகியோரும் உடனி ருந்தனர். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் இதுவரை 92,522  பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது. ஜனவரி இறுதிக்குள் தமிழ கத்தில் 10 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்த  தகுதி பெறுவார்கள். தகுதி உடையவர்கள் உடனடியாக பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசியை  செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். இனி ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் தமிழகத்தில் 600 இடங்களிலும் சென்னையில் 160 இடங்களிலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும். வழக்கம்போல் சனிக்கிழமை சிறப்பு தடுப்பூசி முகாம் நடை பெறும். நோய் தொற்று பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் பரவல் அதிகமாக இருக்கிறது. பொங்கல் பண்டிகைக்காக நிறைய பேர் கிராமத்துக்கும் சொந்த ஊருக்கும் சென்றுள்ளனர். இதனால் பாதிப்பு வருமா என்பது குறித்து இரண்டு நாட்களில் தெரிய வரும். மருத்துவ கலந்தாய்வு குறித்த வழக்கு  நீதிமன்றத்தில் இருப்பதால் முடிவு தெரிந்த வுடன் கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்கள் தொலைபேசி என்னை தவறாக கொடுப்பதும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் தொலைபேசி அழைப்புகளை எடுக்காமல் இருப்பதும் அவர்களுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் அவர்கள் விழிப் புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.