tamilnadu

img

மெரினாவில் மே தினம் நூற்றாண்டு கொண்டாட்டத்தையொட்டி புத்தக வாசிப்பு இயக்கம்

சென்னை, ஏப். 30- இந்தியாவில் உலக தொழிலா ளர்களின் உரிமை தினமான மே  தினத்தை முதன் முதலில் சென்னை  மெரினா கடற்கரையில் 1923ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி பொதுவு டமை இயக்கத்தின் சிற்பி தோழர் மா. சிங்காரவேலர் செங்கொடி ஏற்றி  கொண்டாடினார். அதன் நூற் றாண்டை நினைவு கூறும் வகை யில், “மெரினாவில் மே தினம் நூற்  றாண்டு கொண்டாட்டம்” என்ற  தலைப்பில் புத்தக வாசிப்பு இயக் கம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், பாரதி புத்த காலயம் சார்பில் சென்னை ஓட்டேரி யில் சனிக்கிழமை (ஏப். 30) நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு சம்மேளன பொதுச்  செயலாளர் கே.ஆறுமுக நயினார் தலைமை தாங்கினார். க.நாக ராஜன் (பாரதி புத்தகாலயம்) முன்  னிலை வகித்தார். “சிந்தனை சிற்பி  சிங்காரவேலர் வாழ்வும், பணியும்” என்ற புத்தகத்தை தீக்கதிர் ஆசிரி யர் மதுக்கூர் ராமலிங்கம், “கம்யூ னிஸ்ட் அறிக்கை” என்ற புத்தகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. கனகராஜ், “ஏகாதிபத்தியம் - முதலா ளித்துவத்தின் உச்சகட்ட வளர்ச்சி” என்ற புத்தகத்தை பொருளாதார நிபு ணர் வெங்கடேஷ் ஆத்ரேயா. “குடும்பம், தனிச்சொத்து, அரசு” என்ற புத்தகத்தை தமுஎகச மதிப்புறு தலைவர் ச.தமிழ்ச் செல்வன், “கற்பனாவாத சோச லிசமும், விஞ்ஞான சோசலிசமும்” என்ற புத்தகத்தை சிபிஐ தேசிய கவுன்சில் உறுப்பினர் சி.மகேந்தி ரன், “அரசும் புரட்சியும்” என்ற புத்த கத்தை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் ஆகியோர் அறி முகப்படுத்தி பேசினர். இந்த நிகழ்ச்சி காணொளி மூலம் சென்னை, நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கும்பகோணம், புதுக்கோட்டை, சேலம், தருமபுரி, திருப்பூர், ஈரோடு, விழுப்புரம், கடலூர், திருவண்ணா மலை, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 18 மையங்களில் நடைபெற்றது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். சமூக வலைதள பொறுப்பாளர்கள் சுதிர் ராஜா, இரா.சிந்தன் காணொளி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.