tamilnadu

img

54,000 சதுர அடி கோவில் நிலத்தை அபகரித்த பாஜக எம்எல்ஏ

புதுச்சேரி, அக்.6- புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏ  அபகரித்துள்ள காமாட்சியம்மன் கோயில் நிலத்தை கையகப் படுத்தி கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சிகள் தலை மைச் செயலாளரிடம் முறையிட்ட னர். புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான பல கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்துள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார், அவரது மகன் ரிச்சர்ட் ஜான் குமார் ஆகியோரை கைது செய்யக் கோரி இந்தியா கூட்டணி  கட்சிகள் சார்பில் வெள்ளிக்கிழமை (அக்.6) தலைமைச் செயலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம்  தலைமை தாங்கினார். முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சிபிஎம் மாநில செயலாளர் ஆர். இராஜாங்கம், திமுக மாநில அமைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா, காங்கிரஸ் கட்சியின் பிரதேச தலைவர் வைத்திலிங்கம், எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் தேவப்பொழிலன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் வெ.பெருமாள், இரா.முருகன், விசுவநாதன், கலைநாதன், அமுதவன், சேது  செல்வம் அனந்தராமன், சட்ட மன்றஉறுப்பினர்கள் கென்னடி, செந்தில்குமார், வைத்தியநாதன்  மற்றும் பலரும் இந்த போராட் டத்தில் பங்கேற்று அரசு செயலர் ஜவஹரை சந்தித்து புகார் மனுவை கொடுத்தனர்.