சென்னை, ஜூலை 29- பாஜக நடத்துவது பாதயாத்திரை அல்ல, பாவ யாத்திரை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். ராமேசுவரத்தில் பாஜக மாநிலத் தலை வர் அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கிவைத்து, திமுக கட்சியையும் அர சையும் சாடி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதற்கு பதிலடி தரும் வகை யில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பா ளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற் றது. இதில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகனின் நிழற்குடையின் கீழ் கருத்தியல் அடையாளமாக நிற்கி றேன். இந்தியா என்ற பெயரைக் கேட்டால், சிலர் பதறுகிறார்கள். அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் எங்கு சென்றாலும் திமுகவை விமர்சிக்கிறார்கள். பாத யாத்திரையை தொடங்கி வைக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா வெள்ளிக் கிழமை தமிழ்நாடு வந்தார். பாஜக நடத்து வது பாதயாத்திரை அல்ல.
குஜராத்தில் 2002ஆம் ஆண்டில் நடந்தவைக்கும், தற் போது மணிப்பூரில் நடந்துகொண்டு இருப் பதற்கும் மன்னிப்புக் கேட்கும் பாவ யாத் திரை. 2014இல் பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சேவை அழைத்தவர்கள், இலங்கை பிரச்சனை குறித்து பேச உரிமை உள் ளதா? அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து அமித் ஷா பேசியுள்ளார். குற்ற வழக்கு உடையவர்கள் மத்திய அமைச்சர் களாக இருக்கிறார்கள், இது குறித்து பிரதம ரிடம் அமித் ஷா கேட்பாரா? பாஜக தங்கள் அரசியல் எதிரிகளை சலவை செய்யும் வாஷிங் மெஷினாக அமலாக்கத் துறை யை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பாஜக ஆட்சி முடியப் போகிறது. ஒன்றிய அரசின் ஆட்டம் எல்லாம் சில மாதங்கள் தான். இந்தியாவுக்கு விடியல் பிறக்கப் போகிறது. இந்தியாவை காப்பாற்ற இந் தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.