tamilnadu

img

அதானியை பாதுகாக்க நாடாளுமன்றத்தை முடக்கும் பாஜக

சென்னை, மார்ச் 18 - அதானியை பாதுகாக் கும் நோக்கோடு நாடாளு மன்றத்தையே பாஜக முடக்கி வருவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எஸ்.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட், திரிபுராவில் சிபிஎம் ஊழியர்கள் மீது பாஜகவினர் நடத்தி வரும் தாக்குதல்களை கண்டித்து வெள்ளியன்று (மார்ச் 17)  மேற்கு முகப்பேரில் கூட்டம் நடைபெற்றது. கட்சி யின் மதுரவாயல் பகுதிக்குழு நடத்தியஇந்தக் கூட்டத்தில் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு  நிதி யில் 18 விழுக்காட்டை பட்டிய லின மக்களுக்கு செலவிட வேண்டியது கட்டாயம் என்று  இருந்ததை விரும்பினால் செய்யலாம் என ஒன்றிய அரசு  மாற்றியது. மார்க்சிஸ்ட் கட்சியின் கடும் போராட்டத் தையடுத்து, அந்த உத்தரவை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றுள்ளது என்றார்.  ஒன்றிய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்து வருகிறது. பாஜக ஆட்சிக்கு  வந்த பிறகு பெருமுதலாளி களுக்கு 10 லட்சம் கோடி ரூபாய்  கடன் தள்ளுபடி செய்துள்ளது. அதேசமயம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரத்திற்கான மானியத்தில் 50 விழுக்காட்டை வெட்டி விட்டது. பெட்ரோலிய பொருட்களின் அடக்க விலைக்கு மேல் 60 விழுக்காடு  வரை வரி விதித்து கொள்ளை யடித்து வருகிறது. ஏழை எளிய  மக்களுக்கான ஒதுக்கீடுகளை குறைத்து; மானியங்களை வெட்டி வருகிறது.

அதானி நிறுவனம் ஒன்றிய பாஜக அரசின் துணையோடு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது. ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையை தொடர்ந்து அதானி அம்பலப் பட்டுள்ளார். இதன் விளைவாக இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினருக்கு தொடர்பு உள்ளதா, எதிர்க்கட்சிகள் கோருகிறபடி நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த மறுக்கின்றனர். நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிக்காமல், பாஜக-வினரே அமளி செய்து நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர். பாஜக ஆட்சி செய்ய முடியாத இடங்களில் ஆளுநர் களை வைத்து, மாநில அரசு களை சீர்குலைத்து வருகின்ற னர். சட்டமன்றங்கள் இயற்றும்  சட்டத்திற்கு அனுமதி தராமல்  தொல்லை கொடுத்து வருகின்ற னர். கடந்த 2 ஆண்டுகளில் 44 பேர் இறந்து பிறகும், ஆன்லைன்  விளையாட்டு தடை  சட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநர்  ‘ரம்மி’ரவி ஒப்புதல் தர மறுக் கிறார். ஆளுநர் மாளிகைகள் பாஜக அலுவலகங்களாக செயல்படுகின்றன.

திரிபுராவில் கடந்த சட்ட மன்ற தேர்தலைவிட தற் போதை தேர்தலில் பாஜக வின் வாக்கு விகிதம் 10 விழுக்காடு சரிந்துள்ளதால் ஆத்திரமடைந்து மார்க்சிஸ்ட்  கட்சியின் ஊழியர்களின்,  அலுவலகங்கள், வாழ்வா தாரங்கள் மீது பாஜகவினர் தாக்குதல் தொடுத்துள்ளனர். 700க்கும் மேற்பட்ட இடங்களில்  தாக்குதல்கள் நடந்துள்ளன. 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வளவு வன்முறை சம்ப வங்கள் நடந்த பின்னரும் இதுவரை ஒருவர் மீது கூட  வழக்கு பதிவுசெய்யவில்லை. யாரும் கைது செய்யப்பட வில்லை. இந்த பாதிப்புகளை பார் வையிட சென்ற நாடாளுமன்ற குழுவினர் மீதும் பாஜகவினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர். இத்தகைய வன்முறையை உறுதியுடன் எதிர்கொள்வோம். நாடாளு மன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து பாஜக-வை  அரசியல் ரீதியாக வீழ்த்துவோம். இவ்வாறு அவர் பேசினார். பகுதிக்குழு உறுப்பினர் எஸ்.பிச்சையம்மாள் தலை மையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் எஸ்.குமார், பகுதிச் செயலா ளர் வி.தாமஸ், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சரவண செல்வி, பகுதிக்குழு உறுப் பினர்கள் கே.ரமேஷ், மா.வை.கிருஷ்ணமூர்த்தி, 91வது வட்ட  கிளைச் செயலாளர்கள் பி.சுப்ர மணி, எஸ்.சித்ரா உள்ளிட்டோர் பேசினர்.