1939-இல் ஜான் ஸ்டீன்பெக் எழுதிய “கோபத்தின் கனிகள்” அமெரிக்க நாவல். எண்பது ஆண்டு கள் கழித்து 2019-இல் தமிழில் வெளிவந்தது. தமிழாக்கம் செய்த கி.ரமேஷ் இந்த நூலுக்கு சிறந்த மொழி பெயர்ப்புக்கான விருதைப் பெற்றார். தமிழில் தந்த ரமேஷுக்கு இனிய பாராட்டுகள். நன்றி! 1929 -1939 பத்தாண்டுகள் “பொருளாதார பெருமந்தம்” [Great Depression] உலகை உலுக்கி எடுத்தது. சாதாரண உழைக்கும் மக்க ளின் வாழ்க்கையை நார்நாராய்க் கிழித்துப் போட்டது. இதன் உயிர் சித்திரம்தான் இந்நாவல். அமெரிக்காவில் ஒக்லாஹாமாவில் நிலத்தில் குத்தகைக்கு உழுது பயிர் செய்து பசி யாற்றிவந்தது டாம் ஜோட் குடும்பம். பொருளா தார பெருமந்தமும் டிராக்டரின் வருகையும் வங்கி முதலாளித்துவமும் விவசாயிகளை வேட்டை யாடத் துவங்கியது. வீடுகள் இடிக்கப்பட்டன. விவ சாயிகள் வெளியேறுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். “குத்தகைதாரர்கள் அழுதார்கள் .தாத்தா நிலத்துக்காக இந்தியர்களைக் ஸ அமெரிக்க பூர்வகுடியினரைக்] கொன்றார். அப்பா நிலத்துக்காக பாம்புகளைக் கொன்றார். நாம் ஒரு வேளை வங்கிகளைக் கொல்லலாம். அவை இந்தியர்களையும் பாம்புகளையும்விட மோசமானவை. நாம் நம் நிலத்தை வைத்துக் கொள்ள போராட வேண்டி இருக்கலாம், அப்பா வும் தாத்தாவும் செய்ததைப் போல…” என எண்ணினர்.
டிராக்டர்கள், எந்த அன்பும் இல்லாமல் நிலத்தை வன்புணர்ச்சி செய்து கொண்டிருந்த தாக ஓரிடத்தில் நூலாசிரியர் எழுதுகிறார் . வயிற்றுப் பசியும் வாழ்க்கைப் போராட்டமும் நிர்ப்பந்திக்க ஒக்லாஹாமாவை விட்டு குடும்பம் குடும்பமாக வேலைதேடி சுமார் 2200 கிலோ மீட்டர்களுக்கு அப்பாலுள்ள கலிபோர்னியா வுக்கு பயணப்பட்டனர். டாம் ஜோட் குடும்பமும் அதில் ஒன்று. டாம் ஜோட் தற்செயலான ஒரு கொலையால் தண்டனை பெற்று சிறையி லிருந்தவன், நீண்ட பரோலில் வெளிவந்தவன். பயணம் புறப்படுவதற்கு முன்பே தங்கள் உடமைகளை தவிட்டு விலைக்கு விற்க வேண்டிய சூழல். எரிகிற வீட்டில் பிடுங்கினது ஆதாயம் என அலையும் வியாபாரிகள். அந்த காட்சியை நாவலாசிரியர் விவரிக்கும் போது நம் அடுத்தவீட்டில் நிகழும் அவலக் காட்சியாய் அது விரிகிறது. டாம், அவர் அப்பா டாம், அம்மா, பாட்டி, தாத்தா, கிறிஸ்தவ மதபோதகர், மாமா ஜான், நாலு பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட மொத்தம் 13 பேர் மிகவும் மட்டமான, பய ணத்திற்கு லாயக்கற்ற ஒரு டிராக்டரில் புறப்படு கின்றனர். கலிபோர்னியாவில் ஆரஞ்சுத் தோட்டத்தில் நல்ல வேலையும் கூலியும் வாழ்க் கையும் அமையும் என்கிற பெருங்கனவோடு பயணம் துவங்குகிறது. ஆனால், வழிநெடுக மெல்ல மெல்ல கனவு கலைகிறது. உண்மை உறுத்துகிறது. திரும்பிப் போகவும் முடியாது. புலம் பெயர்தலில் பெரு வலி நாவல் நெடுக ஓலமாய் கேட்கிறது. ரணமாய் உறுத்துகிறது. வழியிலேயே தாத்தா இறந்து போகிறார். பாட்டியும் இறந்து போகிறார். கர்ப் பிணி மனைவி ஷாரன் ரோஜினை வழியிலேயே கைவிட்டுவிட்டு கணவர் கோணி தனிவழி போகிறார்.
வேலையில்லா பட்டாளம் பெருகப் பெருக கூலி குறைக்கப்படுவதும்,பட்டி நாயினும் கீழாய் நடத்தப்படுவதும், லாபவெறி கொண்ட மூல தனத்தின் மூர்க்க முகம் அணு அணுவாய் இந்நாவலில் விவரிக்கப்பட்டுள்ளது. கூலியை குறைக்க இரக்கமற்ற எந்த கொடுஞ்செயலை யும் செய்ய சுரண்டும் வர்க்கம் தயங்காது. விளம் பரமும் வாழ்க்கையும் நேர் எதிரே! ஓக்கிகள் என இழிவுபடுத்தப்படுவதும் தொடர்கிறது . இந்த புலம்பெயர்தலினூடே காதல், பிரிவு, நட்பு, பகை, வெறுப்பு, மனிதம், பக்தி, கேள்வி, நம்பிக்கை, போராட்டம், ஊசலாட்டம், அடக்கு முறை, கொலை, அடிதடி, ஏமாற்றுதல் அடடா! எதுவும் விலகிப் போவதில்லை. தொடர்கிறது. இந்நாவலைப் படிக்கும் போது கொரோ னா காலத்தில் நடந்த கொடூர பயணங்கள் நினை வில் வந்து போயின. பஞ்சம் பிழைக்கவும், வாழ்ந்து தொலைக்கவும் இன்னும் அகதிகளாய் புலம் பெயர்தல் நிற்கவில்லையே! மத போதகர் கேஸி அறிமுகம் ஆனதி லிருந்து அவர் தன்னை போதகர் என சொல்லிக் கொள்வதையே விரும்பவில்லை. மறுதலிக் கிறார். துவக்கத்தில் குறிப்பிட்டவை அவர் வரிகள்தாம். இலேசான கிண்டல் தொணியில் கிறிஸ்தவத்தை கேலி செய்கிறார். மனிதத்தை நியாயத்தை பேசுகிறார் .
புலம் பெயர்தலினூடே சிவப்பும் போர்க்குண மும் எட்டிப் பார்ப்பதும், போதகர் கேஸி ஒரு சிகப்பு மனிதனாய் பரிணமிப்பதும் நிகழ்கிறது. ஆனால், கேஸி கொல்லப்படுகிறார். கேஸியைக் கொன்றவனை டாம் கொல்கிறார். ஏற்கனவே கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு பரோலில் இருக்கும் நிலையில் மீண்டும் ஒரு கொலை. முன்னது போலவே இதுவும் திட்டமிடப்படாத கொலை. பின்னர் குடும்பத்திலிருந்து பிரிந்து தலை மறைவாய் செல்கிறார் டாம். கடைசியாக தாயை சந்திக்கும் போது சொல்கிறார், ”…அவர் ஸகேஸி] சட்டத்துக்கு விரோதமா எதுவும் செய்யலம்மா. நான் நிறைய யோசிச்சிக்கிட்டிருந்தேன். நம்ம ஜனங்க பன்னி மாதிரி வாழ்றதப் பற்றி. ஒரு வேளை பத்து லட்சம் ஏக்கர் ஒரு ஆளுக்கு சொந்தமாக இருக்கலாம். அதே சமயம் நூறா யிரம் பேர் பட்டினி கிடக்கிறாங்க. நம்ம ஆளுங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து குரல் கொடுத்தா…” டாம் சிந்தனையின் திசை சிவப்பு நோக்கி சூழல் அவனை கைதியாய் தேடிக்கொண்டிருக்கிறது. புலம்பெயர்தலின் போதும் பெண்களின் சுமையும் வலியும் முன்பைவிட இரட்டிப்பாகிறது
நாவல் நெடுக சமூகத்தின் வடுவாய் இந்த வலி பதிந்து நிற்கிறது; அதேவேளை நெருக்கடி நேரத்தில் அவர்கள் காட்டும் வலிமையும் உறுதி யும் வெளிப்படுகிறது. சுரண்டலின் கோர நர்த்தனத்திற்கு இடையே இயற்கையும் பழிவாங்குகிறது. கடும் மழை வெள்ளம். ஷாரன் ரோஜ் பிரசவவலியால் துடிக் கிறார். குழந்தை இறந்து பிறக்கிறது. வெள்ளம் சூழ்கிறது. வேறு வழியின்றி ஒரு மேட்டுப் பாறைக்கு இடம் பெயர்கின்றனர். அங்குள்ள சிறுகொட்டகையில் ஷாரன் மார்பில் பால்கட்டித் தவிக்கிறார். அங்கு ஒரு ஐம்பது வயதுக்காரரும் ஒரு சிறுவனும் ஏற்கனவே இருக்கின்றனர். அந்த ஐம்பது வயதுக் காரர் பசியால் மயங்கிக் கிடக்கிறார். ஷாரன் நெஞ்சில் பால் கட்டித் தவிக்கிறார். எல்லோரும் வெளியேற ஷாரன் மார்பிலிருந்து பாலை அவர் வாயில் பீச்சுகிறார். மாப்பசான் சிறுகதை ஒன்றி லும் இதுபோல் ஒரு முத்தாய்ப்பு படித்த ஞாபகம். மீண்டும் ஒரு பொருளாதார பெருமந்தம் உலகைச் சூழாது என முதலாளித்துவத்தால் உறுதி கூற முடியுமா? முடியவே முடியாது. ‘கார்ப்ப ரேட்டே தெய்வம்’ எனத் தொழும் மோடி சர்க்கார் தொடருமாயின் இதனைவிட பேரவலத்தை இந்திய உழைப்பாளி மக்கள் சந்திப்பார்கள். ஐயமில்லை.