சென்னை,மார்ச் 24- ஈரோடு சிக்க நாயக்கர் கல்லூரி மாணவர்கள்,ஆசிரியர்கள் நலன் கருதியும், பொது நலன் கருதியும் அரசிடம் ஒப்படைக்க கொண்டு வரப்படட சட்டத்திருத்த மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவை யில் நிறைவேறியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் வியாழனன்று (மார்ச் 24) உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி தாக்கல் செய்த மசோதாவில் கூறப்பட்டிருப்ப தாவது:- நிலம் மற்றும் பணமாக பொது மக்கள் அரசிடமிருந்து பெறப்பட்ட நன்கொடைகளின் உதவியுடன் மகாஜன பள்ளி குழுமத்தால், 1954 ஆம் ஆண்டி ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி நிறுவப்பட்டது. இந்த பள்ளி குழுமமானது, 12.7.1954 அன்று ஈரோட்டில் 52 ஏக்கர் நிலப்பரப்பில் “மகாஜன கல்லூரி” என்ற பெயரில் கல்லூரியை தொடங்கியது. பின்னர், 1959 ஆம் ஆண்டில் இக் கல்லூரி “சிக்க நாயக்கர் மகாஜன கல்லூரி” என மறுபெயரிடப்பட்டது. பிறகு, 1970 ஆண்டில் சிக்க நாயக்கர் கல்லூரி என மீண்டும் மறுபெயரிப்பட்டது. 1995 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதியிட்ட அரசிதழில் அதன் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த தேதியிலிருந்து சங்கம் கலைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இந்த கல்லூரியின் அப்போதையை மேலாண்மைக் குழுவுக்கு எதிரான நிதி முறைகேடுகள் மற்றும் ஒழுங்கற்ற நிர்வாகம் குறித்த புகார்களின் பெயரில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணிகளர்களுக்கு நேரடியாக ஊதியம் வழங்க கோவை மண்டல கல்வி இணை இயக்குநருக்கு கல்லூரிக் கல்வி இயக்குநர் அதிகாரம் அளித்தார்.
பின்னர், இக் கல்லூரியின் மேலாண்மையை இடை நீக்கம் செய்து, கோவை மண்டல கல்லூரிக் கல்வி இயக்குநர் தனி அலுவ லராக நியமனம் செய்யப்பட்டார். அதன்பிறகு, இரண்டு ஆண்டுக ளுக்கு மாநில அரசின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கோவை மண்டல கல்லூரிக் கல்வி யின் மண்டல இணை இயக்குநர் இந்த கல்லூரியின் மேலாண்மையை நடத்த பொறுப்பாளராக நிய மிக்கப்பட்டார். இன்னமும் அரசின் கட்டுப் பாட்டின் கீழ் உள்ளது. எனவே, மாண வர், ஆசிரியர்களின் நலன் கருதியும், பொது நலன் கருதியும் இந்த கல்லூரியை தற்போது அரசுக்கு மாற்றப்படலாம் மற்றும் ஒப்படைக் கலாம் என கருதப்படுகிறது. எனவே, அதன் நோக்கத்திற்காக சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்திருக்கி றது. இதற்காக இந்த சட்டமுன் வடிவு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது. இவ்வாறு தெரிவித்தார். தமிழ்நாடு குடிசைப்பகுதிகள் திருத்தச் சட்ட முன்வடிவை அமைச்சர் தா.மோ. அன்பரசனும், தமிழ்நாடு சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்து தல் சட்டமுன் வடிவை அமைச்சர் சு. முத்துசாமியும், தமிழ்நாடு ஆவண எழுத்தர்களின் நலநிதியச் சட்ட முன்வடிவை அமைச்சர் பெ.மூர்த்தியும், தமிழ்நாட்டிற்கு வெளியில் வாழும் தமிழர்கள் நல திருத்தச்ச சட்ட முன்வடிவை அமைச் சர் கே.எஸ். மஸ்தானும்தாக்கல் செய்தனர். இந்த நான்கு சட்ட மசோதாக்க ளும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறை வேற்றப்பட்டன.