வெளிநாடுகளில் உணவகங்களில் ரோபோக்கள் மூலம் உணவு பரிமாறு வது ஏற்கெனவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நமது அண்டை நாடுகளிலும் கூட அவை ரோபோக்கள் உணவு பரிமாறுகின்றன. நம் நாட்டில் சென்னை, கோவை போன்ற நகரங்களில் நடைமுறையில் உள்ளன. கர்நாடகாவிலும் உண்டு. ஆனால் இப் போது அங்கு உள்ள ஓர் உணவகத்தில் வாடிக்கை யாளர்களுக்கு உணவைப் பரிமாற வருகிறது. சேலை கட்டிய ரோபோ மங்கை. தொழில்நுட்ப அம்சங்களை உணவகங்கள் நாடி வரும் இன்றைய நவீன யுகத்தில் வாடிக்கையாள ருக்கு அடுத்து என்ன புதுமையான அனுபவத்தை வழங்கலாம் என்று சிந்தித்ததில் இந்தப் புதுவிதமான திட்டம் உருவெடுத்துள்ளது. மைசூரு மாவட்டத்தில் உள்ள சித்தார்த்தா உணவகத்தில் மனிதர் கள் வந்து உணவைப் பரிமாறுவ தற்குப் பதிலாக இந்தச் சேலை கட்டிய ரோபோ மங்கை வருகிறது. தனக்கு என்ன வேண்டும் என்று வாடிக்கையாளர் கள் கூறுவதைப் பட்டியலிடும் உணவக ஊழியர்கள், அப்பட்டியலை ரோபோவிடம் ஒப்படைப்பர். ரோபோவும் அந்தப் பட்டியலைச் சமையல் செய்பவரி டம் வழங்குகிறது. அதன் பின்னர் தயாரான உணவு ரோபோவிடம் உள்ள பாத்திரத்தில் வைக்கப் படும். அதை ரோபோ வாடிக்கையாளரின் மேசைக்குக் கொண்டு செல்லுகிறது. நான்கு மணி நேரத்திற்கு மின்னூட்டப்பட்டால் கிட்டத்தட்ட எட்டு மணி நேரத்திற்கு இந்த ரோபோக்கள் சளைக்காமல் இயங்கும் என்று கூறப்படுகிறது. தில்லியிலிருந்து வரவழைக்கப்பட்ட இந்த ரோபோவுக்கான செலவு, 2.5 லட்சம் ரூபாய் (S$4,477)என்று உண வகத்தார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இன்னும் ஆறு ரோபோக் ்களைத் தாங்கள் கொள்முதல் செய் துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்ட னர். உணவகத்தின் மனிதவளத்திற்கு இந்த ரோபோக்கள் துணைபுரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.