சென்னை, பிப்.28- விவசாய விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை உறுதிப்படுத்த வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்திற் கான நிதியை குறைக்காமல் வழங்க வேண்டும். 40 கோடி முறைசாரா தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். சுகாதாரம் கல்வி மற்றும் கிராமப்புற மேம் பாட்டு நிதியை அதிகப்படுத்த வேண்டும். உரம், உணவு, எரிபொருள் மானியத்தை குறைக்கக் கூடாது, சிறு, குறு, நடுத்தர தொழில்களை பாது காக்க வேண்டும். தொழிலாளர் விரோத நான்கு சட்டங்களை யும் திரும்பப் பெற வேண்டும். மின்சார திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என வலியு றுத்தி ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத, விவசாயிகள் விரோத, தொழிலாளர் விரோத நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை மாநிலம் தழுவிய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய தொழிற்சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில, மாவட்டத் தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.