சென்னை,டிச.17- தகவல் தொழில்நுட்ப முன்னெடுப்புகளை சிறப்பாக செயல்படுத்துவதன் மூலம் தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு அறிவிக்கும் பலன்கள் சென்று சேருவதை சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை மேலும் முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார். சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் செயல்பாடுகள் குறித்து சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமையன்று (டிச.17) ஆய்வு மேற்கொண்டார். அப்போது, துறையின் அரசு முதன்மைச் செயலாளர் உதயச் சந்திரன், துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சருக்கு விரிவாக எடுத்துரைத்தார். ஆளுநர் உரையின்போது, 110-ன் கீழ் வெளி யிடப்பட்ட அறிவிப்புகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் வெளியிடப்பட்ட இதர அறிவிப்புகள், நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்தின்போது அமைச்சரால் அறிவிப்புகள் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட துறைகளின் மூலமாக ஆணை வெளியிடப்பட்ட விவரங்கள் மற்றும் அவற்றின் செயலாக்கத்தினை இத்துறை கண்காணிக்கும் முறை பற்றியும், துறைவாரியாக 2021-22, 2022-23ஆம் ஆண்டுகளில் இதுவரை வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு ஆணை வெளியிடப்பட்ட விவரங்கள் பற்றியும் அமைச்சருக்கு விரிவரிக்கப்பட்டது.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் கள ஆய்வு அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட ஆய்வறிக்கைகளை இத்துறை உரிய முறையில் தொகுத்து சம்மந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து அதன் அடிப்படையில் திட்டங்களின் சிறப்பான செயல்பாட்டிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அமைச்சர் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அரசின் கண்காணிப்பு அமைப்பாக திறம்பட செயல்பட வேண்டியதன் அவசியத்தையும், அறி விப்புகள் ஆணைகளோடு நின்றுவிடாமல் அவை கடைகோடி மக்களையும் சென்றை டையும் வகையில் உரிய கண்காணிப்பு நட வடிக்கைகளை இத்துறை மேற்கொள்ள வேண்டும் என்பதையும், திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த பல்வேறு சம்பந்தப்பட்ட துறைகளுடன் இத்துறை இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும், அரசின் திட்டங்கள் வெற்றியடைய சம்பந்தப்பட்ட துறைகளை இத்துறை சிறப்பாக ஒருங்கிணைக்க வேண்டிய அவசியத்தையும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.