tamilnadu

img

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்க்கைக்கு முன்பே நான்கு மாதத்திற்கு கல்விக் கட்டணம் வசூலிப்பதா? ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி., புகார் கடிதம்....

மதுரை:
11 ஆவது வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் சேர்க்கைக்கு முன்புள்ள நான்கு மாதத்திற்கு ரூ.3,150 கல்விக் கட்டணம் வசூலித்திருக்கும் கேந்திரிய வித்யாலயாவின் செயல் குறித்து ஒன்றிய அமைச்சருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஒன்றிய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில்கூறியுள்ளதாவது:

10 ஆம் வகுப்பிற்கான கல்வி பிப்ரவரி 2021-லேயே முடிந்துவிட்டது. கொரோனா இரண்டாம் அலையால் தேர்வு முடிவுகள் தாமதமாகி ஆகஸ்ட் 3, 2021 ல் தான் அறிவிக்கப்பட்டது. அதற்கு பின்னர் 11 ஆம் வகுப்பு  மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டு ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் முடிக்கப்பட்டது. ஆனால், 11 ஆவது வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு முதல் காலாண்டுக்கும், இரண்டாவது காலாண்டில் ஒன்றரை மாதத்திற்கும் சேர்த்து ரூ.3,150 கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் மாதத்தில் பள்ளியில் சேர்ந்துள்ள மாணவனுக்கு ஏப்ரல் மாதத்திலிருந்து கல்விக்கட்டணம் வசூலிக்கப்பட்டுள் ளது.11 ஆம் வகுப்பில் சேராத காலத்தில்டியூசன் கட்டணம் ரூ.1200, வித்யாலயா விகாஸ் நிதி ரூ.1500, கணினி கட்டணம் ரூ.300, கணினி அறிவியல் கட்டணம் ரூ.150 என வசூலிக்கப்பட்டு ரசீதுகொடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பெற்றோர்கள் என்னை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளனர். வகுப்புகள், கல்விநடவடிக்கைகள் எதுவுமே இல்லாத காலத்திற்கு கட்டணம் என்பது முறையல்ல. பெற்றோரின் புகார் முற்றிலும் நியாயமானது. எனவே, இதில் தலையிட்டு வசூலித்த கட்டணத்தை திருப்பி தர வேண்டும், இல்லாவிடில் எதிர்கால கட்டணத்தில் நேர் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

;