tamilnadu

img

கோவை - வ.உ.சி பூங்காவில் வளர்க்கப்பட்ட புள்ளி மான்கள் வனப்பகுதியில் விடுவிப்பு!

கோவை வ.உ.சி உயிரியல் பூங்கா மூடப்பட்ட நிலையில் அங்கிருந்த 26 புள்ளி மான்கள் சாடிவயல் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சியின் மையப் பகுதியில் செயல்பட்டு வந்த வ.உ.சி உயிரியல் பூங்காவை மாநகராட்சி நிர்வாகம் பராமரித்து வந்தது. இங்குப் புலி, மான், கரடி, குரங்குகள்,  பாம்புகள், பறவைகள் இருந்தது. ஆனால் உயிரியல் பூங்கா செயல்படுவதற்கான சூழல் இல்லை என ஒன்றிய அரசு அனுமதியை ரத்து செய்தது.

இதனால் கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவிலிருந்த விலங்குகள் சென்னை வண்டலூர் பூங்கா வேலூர் சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் வ.உ.சி உயிரியல் பூங்காவிலிருந்த சுமார் 26 புள்ளி மான்களைக் கோவை வனச்சரக அதிகாரிகள் பத்திரமாக வாகனத்தில் கொண்டு சென்று சாடிவயல் வனப்பகுதிக்குள் விடுவித்தனர். கதவைத் திறந்தவுடன் புள்ளி மான்கள் துள்ளிக் குதித்து வனப்பகுதிக்குள் சென்றது.