tamilnadu

img

தேசிய சிறுத்தைகள் கட்சி நிறுவனர் பீம்சிங் காலமானார்

ஜம்மு, மே 31- ஜம்மு-காஷ்மீர் தேசிய சிறுத்தை கள் கட்சியின் நிறுவனரும் தலை வருமான பீம்சிங் செவ்வாயன்று காலமானார். ஜம்மு-காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி (Jammu & Kashmir National Panthers Party) ஜம்மு- காஷ்மீர் மாநில அரசியல் கட்சியாக 23 மார்ச்  1982 அன்று பீம் சிங் மற்றும் ஜெய் மாலா  என்பவர்களால் நிறுவப்பட்டது. இதன் குறிக்கோள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஊழல், இனவாதம், போதைப் பொருட் களை ஒழிப்பதும், உண்மையான ஜனநா யகத்தை உறுதிப்படுத்துவதே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது.  பீம் சிங் அரசியல் கட்சி நிறுவனர் மட்டு மல்ல, வழக்கறிஞர், சமூக ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் ஆக சமூகத்திற்கு அவர் பெரும் பங்காற்றியவர். அவர் மனைவி மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தார். ஒரு வருடத்திற்கும் மேலாக உடல்நலக் குறை வால் அவதிப்பட்டு வந்தவர் செவ் வாயன்று காலை மருத்துவ மனையில் காலமானார். மதச்சார்பற்ற கொள்கையில் உறுதிமிக்கவர் : தாரிகாமி புகழாரம் பேராசிரியர். பீம்சிங் மதச்சார்பற்ற கொள்கைகளில் உறுதிமிக்கத்  தலைவராக இருந்தார், மாநில சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் சமூகத்தின் பட்டியலின மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக இடைவிடாமல் போராடி னார். அரசியல் அரங்கில் பிரிவினைவாதம் தலை தூக்கியிருந்த காலத்தில் அவர் மத  நல்லிணக்கத்திற்காகப் போராடினார் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் யூசுப் தாரிகாமி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.