சென்னை, ஜன.2 - கடன் தொல்லை காரணமாக தனியார் வங்கி அதிகாரி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.சென்னை பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் வாங்கிய கடன்களை அடைக்க முடியாமல் திணறி வந்தார். இந்நிலையில் தனது மனைவி பிரியா, மகன்கள் தரன் மற்றும் தாகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி அதிகாரியான மணிகண்டன் யார், யாரிடம் கடன் வாங்கியிருந்தார்? கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.