கள்ளக்குறிச்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.52 கோடி வங்கிக் கடன்
கள்ளக்குறிச்சி, ஜூன் 11 - தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறு வனம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக மகளிர் சுய உதவிக் குழு தின விழாவை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 530 மகளிர் குழுக்களுக்கு ரூ. 52 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் வங்கிக் கடன் வழங்கப்பட்டது. நீலமங்கலம் தனியார் பள்ளிக் கூட்ட ரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரசாத் மற்றும் மக்களவை உறுப்பி னர் மலையரசன் ஆகியோர் வங்கிக் கடன் காசோலைகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி யின் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரஞ்சித், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சாந்தி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வா தார இயக்க இணை இயக்குநர் திட்ட இயக்கு நர் சுந்தர்ராஜன் மற்றும் துறை சார்ந்த அதிகாரி கள் கலந்துகொண்டனர். சுய உதவிக் குழுக்கள் தொடர்பான ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற னர்.