tamilnadu

img

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்காதீர்!

வங்கி ஊழியர் சம்மேளன மாநில மாநாட்டில் தீர்மானம் சேலம், டிச.19- இந்திய வங்கி ஊழியர் சம்  மேளன13 ஆவது மாநில மாநாடு சேலத்தில் நடைபெற் றது. இரண்டாவது நாளாக நடைபெற்ற மாநாட்டில் பிரதி நிதிகள் விவாதத்தை தொட ர்ந்து சங்கத்தின் பொதுச் செய லாளர் தேவாசிஸ் பாசு சௌத்ரி நிறைவு செய்து திங்களன்று உரையாற்றினார்.  விலைவாசி உயர்வை கட்  டுப்படுத்த வேண்டும், வேலை வாய்ப்பை உருவாக்க வேண்  டும். வங்கிகளில் அயல் பணி  முறையை கைவிட வேண்டும், வங்கி முகவர்களுக்கு நிரந்தர ஊதியம் மற்றும் நிரந்தர பணி வழங்க வேண்டும், வங்கியில் பெண் ஊழியர்களுக்கு முறை யான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், ஒன்றிய அரசு ஊழியர்களைப் போன்று பிர சவ கால விடுப்பு ஒரு குழந்  தைக்கு ஒரு வருடம் என்னும்  அடிப்படையில் ஒட்டுமொத்தம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்  தப்பட வேண்டும், பொதுத் துறை கிராம கூட்டுறவு வங்கி களை பாதுகாக்க வேண்டும், தினக்கூலி ஊழியர்களையும் வங்கி முகவர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக் கூடாது, பண மயமாக்கல் என்ற பெய ரில் அரசு சொத்துக்களை தனி யாருக்கு தாரை வார்க்கக் கூடாது, காண்ட்ராக்ட் - கேசு வல் முறையை கைவிட வேண்  டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு மாநாட்டில், இந்திய வங்கி ஊழியர் சம்மேளன மாநிலத் தலைவராக சுனில் குமார், பொதுச் செயலாளராக ரவிக் குமார், பொருளாளராக லட்சுமி நாராயணன் மற்றும் 25 செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 40 பேர் தேர்ந்தெடுக் கப்பட்டனர்.