tamilnadu

img

மூன்று தேசங்களின் கதை - சச்சிதானந்த மொகந்தி

வங்கதேசம் சமீபத்தில் தனது 50 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவைக் கொண்டாடியது. மோடியின் அரசு வங்கதேச விடுதலைப் பொன்விழா வாழ்த்துக்களை தெரிவிக்கும் போது இந்தியப் படைவீரர்களின் வீரத்தைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டு அத்துடன் முடித்துக் கொண்டது. ‌இந்தியாவின்  பன்மைத்துவத்தின் மீது போர் தொடுத்துள்ள  மோடியின் அரசிடம் இதற்கு மேல் எதிர்பார்க்க முடியாது. மதத்தின் அடிப்படையில் மட்டுமே ஒரு தேசத்தை உருவாக்க முடியாது. மக்களின் இன, மொழி, பண்பாட்டு உரிமைகள்   ஒடுக்குமுறைக்குள்ளானால் தேச ஒற்றுமைக்கு ஆபத்து என்பதே வங்கதேசப் போரின் முக்கிய செய்தியாகும். வங்கதேசம் உருவாகக் காரணமே  அன்றைய மேற்கு பாகிஸ்தானின்  கிழக்குப் பாகிஸ்தான் மீதான இன,மொழி, கலாச்சார ஒடுக்குமுறைதான்; ஒற்றை இன,மொழி, கலாச்சார திணிப்பு நடவடிக்கைகள்தான். கட்டுரையாளர் பேரா.சச்சிதானந்த மொகந்தி ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறை தலைவராகவும், ஒடிசா மத்தியப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராகவும் பணியாற்றியவர். அவர் வங்கதேசப் போர் குறித்த புத்தக வரிசையில் குறிப்பிடத்தக்க மூன்று புத்தகங்களின் அடிப்படையில் பல்வேறு அம்சங்களை அலசுகிறார். முக்கியமாக இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினையாக இந்திய  அரசியல்சட்ட மாண்புகளை பாதுகாத்து இந்தியாவின் பன்முக மொழி, இன, கலாச்சார வேற்றுமையை மதித்து நடக்க வேண்டும் என்பதை அடிக்கோடிட்டு காட்டுகிறார்.

வங்கதேசம் இந்தியர்களின் ரத்தத்தால் உருவானது. வங்க தேச விடுதலைக்காக இந்தியப்படைகள் தீரத்துடன் பாகிஸ்தானு டன் போரிட்டன.இந்திய மக்கள் வங்க தேச விடு தலைக்கு முழு ஆதரவளித்தனர். அன்று இந்தியா கடு மையான சூழ்நிலையில் இருந்த போதும் 80 லட்சம்  வங்கதேச அகதிகளுக்கு அடைக்கலம் தந்து உண வளித்தது. போரில் இந்தியா மிகப்பெரிய வெற்றியடைந் தது. வெற்றி அடைந்தாலும் இந்தியா பாகிஸ்தான், வங்க தேசம் இரண்டு நாடுகளிடமும்  நட்புக் கரம் நீட்டியது. பாகிஸ்தானிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டது.இந்திய-வங்கதேச  நல்லுறவு நீடிக்கிறது. “விடுதலையும் அதற்கப்பாலும்”இந்தியா-வங்கதேச உறவுகள் (1971-99)ஜே.என். தீக்சித் என்பவர் எழுதிய புத்தகம்.அவர் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவர். வங்கதேச தந்தையும்  அவாமி லீக் கட்சியின் தலைவருமான முஜிபுர் ரகுமான்  மக்களை கவர்ந்து இழுக்கும் அரசியல் தலைவர். உறக்கத்தில் இருந்த வங்கதேச மக்களை தனது கிளர்ச்சியூட்டும் பேச்சால் எழுச்சி கொள்ள வைத்தார்.

ஜின்னாவின் ஒற்றைத்துவம்

அன்றைய பாகிஸ்தான் கவர்னர் ஜெனரல் முகமது அலி ஜின்னா 1948 இல் டாக்கா பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார்.அந்த பேச்சு பாகிஸ்தான் ஆளும் வர்க்கங்கள் வங்கதேச மக்களின் இன, மொழி, கலாச்சார பாரம்பரியத்தை மதிக்கத் தவறியதை உணர்த்தியது. சுதந்திர பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த மாநில உணர்வுகள் தூண்டப்படுகிறது. பாகிஸ்தானின் கிழக்கு வங்க மாநில  மக்கள் தங்கள் மாநிலத்திற்குள் அலுவல் மொழியாக தாங்கள் விரும்பும் எந்த மொழியையும் பயன்படுத்திக் கொள்ள லாம். ஆனால் மாநிலங்களுக்கு இடையிலான தொடர்பு மொழியாக உருது மட்டுமே இருக்க வேண்டும். வேறு எந்த மொழியும் இருக்கக் கூடாது. இந்த துணைக் கண்டத்தில் லட்சக்கணக்கான மக்களால் பேணி வளர்க்கப்பட்டது உருது மொழி. பாகிஸ்தான் முழுவதும் புரிந்துகொள்ளப்படும்  உயர் வான மொழி உருது.  இஸ்லாமிய பண்பாடு, முஸ்லிம் பாரம்பரியத்தை சிறப்பாக வெளிப்படுத்தும் மொழி மற்றும் இஸ்லாமிய நாடுகளில் பேசப்படும் மொழி உருது. மொழி சர்ச்சையை பயன்படுத்தி பிரச்சனையை உருவாக்குபவர்களுக்கு உருது மொழியின் பாரம் பரியம் நன்றாகவே தெரியும்.தப்புக் கணக்கு போட வேண்டாம். பாகிஸ்தான் அரசு அங்கீகரித்த மொழி ஒன்றே ஒன்றுதான். அது உருது மட்டுமே.பாகிஸ்தான் எதிரிகளை, சில சந்தர்ப்ப அரசியல்வாதிகளை எச்சரிக் கிறேன் என்றார்  ஜின்னா.  கிழக்கு வங்க மக்களின் இன, மொழி, கலாச்சார பண்பாடு உணர்வுகள் குறித்து எந்த வித கூருணர்வும் அற்ற முறையில் ஜின்னா பேசி னார். இதற்கு எதிராக கிழக்கு வங்க மாநிலம்  முழுதும் எதிர்ப்பலை எழுந்தது. இது காலப்போக்கில் முற்றி 1971 மார்ச் 26 இல் பாகிஸ்தானிடமிருந்து கிழக்கு வங்கம் விடுதலை பெற்றதாக  அறிவிப்பதில் முடிந்தது. கிழக்கு வங்க மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத சொரணையற்ற தன்மை மற்றும் அனைத்து வளங்களையும் சமமாக விநியோகிக்காத பாரபட்சமும் வங்கதேசம் உருவாக வழிவகுத்தது.

இடையில் ஏற்பட்ட  ராணுவ ஆட்சிகள்

வங்கதேச ராணுவத்தில் இருந்த சில துரோக சக்திகளை முஜிபுர் ரகுமான் அடையாளம் கண்டு கொள்ள தவறியதால் சில பிரச்சனைகள் உருவாயின. ராணுவத்தில் சிலர் எதிரி நாடுகளின் உளவுத்துறையு டன் தொடர்பு கொண்டிருந்தனர். இந்தியா மற்றும் சோவியத் ஒன்றியத்துடனான  வங்கதேசத்தின் நெருக்கமான உறவு குறித்து அவர்கள் சந்தேகப் பார்வை கொண்டனர். இந்திய உளவுத்துறையான ரா (RAW) இது குறித்துமுஜிபுர் ரஹ்மானை எச்சரித்த போதும் துரோகிகளை அவர் நம்பினார். அது  அவரது உயிருக்கே வினையாக முடிந்தது.இதனால் வங்கதேசம் பல பிரச்சனைகளை சந்தித்தது. தொ டர்ச்சியாக ராணுவ அரசுகள் ஆட்சியில் அமர்ந்தன.ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி ஆட்சியை கைப்பற்றும் வரை பிரச்சனைகள் நீடித்தன.

கிழக்கு வங்க பிரச்சனை  குறித்த இந்திய அரசின் நிலைப்பாடு  உருவான விதம்

கிழக்கு பாகிஸ்தானில் இன மொழி கலாச்சார ஒடுக்குமுறைக்கு எதிரான வளர்ச்சிப் போக்குகள் குறித்து இந்தியா தொடர்ச்சியாக உற்றுக் கவனித்து வந்தது. இந்தியவெளியுறவுத் துறையும் ,இந்திய உளவுத் துறையும் இரண்டு விதமான கருத்துக்களை கொண்டி ருந்தன. இந்திய உளவுத்துறை கிழக்குப் பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என்று பரிந்துரை செய்தது. மேற்கு பாகிஸ்தானின் ஒடுக்கு முறையால் கிழக்கு பாகிஸ்தான் பிரிவது தவிர்க்க முடியாதது என்ற முடிவுக்கு வந்திருந்தது. வெளியுறவுத்துறை அமைச்சரகமோ இதற்கு நேர் எதிரான நிலைபாட்டைக் கொண்டிருந்தது. அமெரிக்க ஆதரவுடனோ அல்லது அமெரிக்க ஆதரவு இல்லாம லோ  பிளவுபடாத பாகிஸ்தானே இந்தியா கையாள எளி தாக இருக்கும் என்று வெளியுறவுத்துறை நம்பியது. இறுதியில் இந்திய உளவுத்துறையின் கருத்தையே அன்றைய பிரதமர் இந்திரா காந்தி ஏற்றுக் கொண் டார். எதார்த்த அரசியல் அணுகுமுறை அடிப்படை யில் இந்தியா கிழக்கு வங்கப் பிரச்சனையில் தலை யிடுவது என்ற கருத்துக்கு வந்து சேர்ந்தார். “அதிகாரமும் ராஜதந்திரமும்”(Power and Diplo macy) என்ற புத்தகம் ஜொரோவர் சிங் என்பவர் எழுதிய தாகும்.அதில் வங்கதேச போருக்கு வழிவகுத்த பல்வேறு நிகழ்ச்சிப் போக்குகள் விவரிக்கப்பட்டுள்ளன.

    முஜிபுர் ரகுமானின் வேண்டுகோள்

1971 மார்ச் 18 இல்  முஜிபுர் ரகுமான் தில்லிக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தார். அதில் வங்கதேசம் நெருக்க டியில் உள்ளது. நெருக்கடி நேரத்தில் இந்தியா உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். மேற்கு பாகிஸ்தானின் மிகப் பெரிய எண்ணிக்கை யிலான படை வருகையை எதிர்பார்த்தார் முஜிபுர். எனவே தனது அடுத்த நடவடிக்கை பற்றி இந்தியா விடம் ஆலோசனை கேட்டார். இந்தியாவிற்கு முஜிபுர் ரகுமான் கிழக்கு வங்க விடுதலைக்காக போராடுவதை தவிர வேறு வழி இல்லை என்று செய்தி அனுப்பியது. எனினும் இந்த நேரத்தில் இந்தியா வெளிப்ப டையாக முஜிபுருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம். அவ்வாறு ஆதரவு தெரிவித்தால் பாகிஸ்தான் ஜனாதி பதி யாஹ்யா கானால் முஜிபுர் கடுமையான நெருக்க டிக்கு உள்ளாகி விடுவார். பாகிஸ்தான் படைகள் கிழக்கு வங்கத்தை துவம்சம் செய்துவிடும் என்று இந்திரா காந்தியின் தனிச் செயலர் பி.என். ஹக்சர் ஆலோசனை வழங்கினார் வங்கதேச போர் குறித்து 2021 இல் வெளிவந்துள்ள புத்தகம்  போர்க்களத்தில் செய்தி சேகரித்த மானஷ் கோஷ் என்பவரின் “வங்கதேசப் போர் “ ஆகும்.

பாகிஸ்தான் ராணுவத்தின் குற்றச்செயல்கள்

பாகிஸ்தான் ஜனாதிபதி யாஹ்யா கான்  தலைமை யிலான பாகிஸ்தான் படைகள் ராணுவ  தார்மீக போர் நெறி- நடத்தை விதிகளை மீறி கடுமையான போர்க் குற்றங்களில் ஈடுபட்டனர். நிராயுதபாணியான அப்பாவி மக்களை கொன்று குவித்தனர். ஆயிரக்க ணக்கான பெண்களை பாலியல் வல்லுறவு செய்தனர். வங்கதேச மக்களை படுகொலை செய்து இன அழித் தொழிப்பு கொடுமையைச் செய்தனர். ஆயிரக்க ணக்கான கிழக்கு வங்க அறிவுஜீவிகளும், கலைஞர்க ளும் கொல்லப்பட்டனர்.

மேற்கத்திய மீடியாக்களும்-நிக்சனின் பங்கும்

மேற்கத்திய மீடியாக்கள் மேற்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு படையினர் வழங்கிய செய்திகளை மட்டுமே உலகிற்கு வழங்கின. ஆனால் மானஷ் கோஷ் மற்றும் இந்திய சக நிருபர்களும் போர்க்களத்தில் உயி ருக்கு அச்சுறுத்தலுடன்  உண்மையான செய்திகளை சேகரித்து வழங்கினர்.மேற்கு பாகிஸ்தானின் ஆக்கிர மிப்பு படைகளின் குற்றச்செயல்களை உலகிற்கு தெரிவித்தனர். அன்றைய அமெரிக்க ஜனாதிபதி நிக்சனும் அவரது வெளியுறவுத்துறை அமைச்சர் கிஸிங்கரும் ஆக்கிரமிப்பாளர் மேற்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடந்து கொண்டனர். நிக்சன் அமெரிக்காவின் ஆறாவது கப்பல் படையை பாகிஸ்தானுக்கு ஆதரவாக வங்கக் கடலை நோக்கி நகர்த்தினார்.

இந்தியப் படைகளின் வீரம்

பிரிட்டிஷ் இந்திய ராணுவம் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரில் சாதாரண என்ஃபீல்டு துப்பாக்கிகளை பயன்படுத்தும் நிலையிலி ருந்தது.1948 இல் காஷ்மீர் பிரச்சனையில் நவீன ஆயு தங்களுக்கு எதிராகப் போராட முடியாத துர்ப்பாக்கிய நிலையில் சுதந்திர இந்தியா இருந்தது.ஆனால் இந்திய-பாகிஸ்தான் 1971 போரில் இந்திய படைகளின் பலம் சிறப்பாக இருந்தது. சோவியத் ஒன்றியம் அளித்த மிக் ரகவிமானங்கள் போன்ற புதிய தலைமுறை விமானங்கள், குண்டு வீசும் விமானங்கள்,இடைமறித்து தாக்கும் விமானங்கள், விக்ரந்த் போன்ற விமானம் தாங்கிக் கப்பல் ஆகியவை களுடன் இந்திய விமானப்படை வலிமையாக இருந்தது. மேற்கு பாகிஸ்தான் படைகள் தங்களுக்கு எதிராக கலகம் செய்த மக்களை எதிர்கொண்டனர். மேற்குப் பகுதி முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. மழைக்காலத்தில் முடிவற்ற ஆறுகள் ஓடைகள் சதுப்பு நிலங்களில் பாகிஸ்தான் படைகள் திணறின. இந்திய படைகளால் பாகிஸ்தான் படைகள் சுற்றி வளைக்கப்பட்டன. அவர்களுக்கு சரணாகதி  அடைவ தைத் தவிர வேறு வழி இல்லை. 90 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் போர்க் கைதிகளாக பிடிக்கப் பட்டனர். நவீன யுத்த வரலாற்றில் இது மிகப்பிரமாண்ட மான எண்ணிக்கையாகும்.

மறக்கக்கூடாத படிப்பினைகள்

வங்கதேசப் போரின் படிப்பினைகளை இன்னும் நாம் கற்றுக் கொள்ளவில்லை.இது பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.இன்று இந்தியா  நாட்டின் பல பகுதிகளிலும் தனது சொந்த மக்களுக்கே எதிராக  களமிறங்கியுள்ளது. இந்தியாவுக்கு இப்போது பெரிதும் தேவை சகல பகுதி மக்களுடன் உரையாடல் நடத்துவதுதான். தங்கள்அந்நியப்படுத்தப் பட்டதாக உணரும் மக்களிடம் பரஸ்பர சுயமரியாதை, நல்லெண்ணம், புரிதலுடன் உரையாடல் நடத்தப்பட வேண்டும். இந்திய அரசு அரசியல் சட்ட முக்கிய மாண்புகளை பாதுகாத்துக் கொண்டே நமது நாட்டின் பன்முக மொழி, இன , கலாச்சாரம், அரசியல் வேற்றுமைகளை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் பன் மைத்துவத்துடன் இனவாதம், போர்வெறி, தீவிரத் தேசியவாதம் ஆகியவற்றிலிருந்து விட்டு விடுதலை யாக வேண்டும்.

ஃப்ரண்ட்லைன் ஜன.14,2022,  தமிழில்:  ம.கதிரேசன்