tamilnadu

img

மருத்துவமனை கட்டில் உடைந்ததில் பச்சிளம் குழந்தை படுகாயம்

விருதுநகர் அரசு மருத்துவமனை கட்டில் உடைந்து விழுந்ததில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தை படுகாயம் அடைந்த சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

விருதுநகர் பரங்கிநாதபுரத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி முனியசாமி தம்பதியினர். இவர்களுக்கு கடந்த வியாழனன்று விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் திங்கள் அன்று பிற்பகல் 2:30 மணி அளவில் தாயும் சேயும் அரசு மருத்துவமனை  படுக்கையில் படுத்து இருந்தபோது திடீரென கட்டில் உடைந்து விழுந்தது.
இதில் பிறந்து ஜந்து நாட்களே ஆன  குழந்தை காயம் அடைந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பணியில் இருந்த செவிலியர்கள் மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மருத்துவர்கள் குழந்தையை  தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
ஆனால் தலையில் பட்ட காயத்தினால் மூளையில் இரத்தக் கசிவு நிற்கவில்லை.
இதைத்தொடர்ந்து  குழந்தையை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது