சென்னை,நவ.19- மாசிலா- விஜயா அறக்கட்டளை சார்பில் ஜனநாயக பாதுகாவலர் விருது-2024 வழங்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக அரங்கில் நடை பெற்றது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும் மாதர் சங்க தலைவர்களில் ஒருவருமான கே.பாலபாரதி, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு, ஐஏஎஸ் அதிகாரி உ. சகாயம், இந்து நாளிதழ் என்.ராம், எழுத்தா ளர் இந்திரன் ஆகிய 5 ஆளுமை களுக்கு பாதுகாவலர் விருதுகளை விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை வழங்கிக் கவுரவப்படுத்தி னார். இந்த விழாவில் மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில், இந்த ஆண்டு ஜனநாயகத்தின் 4 தூண் களான, சட்டப்பேரவை, அரசு நிர்வா கம், நீதித்துறை, பத்திரிகைத்துறை ஆகியவற்றை சேர்ந்த ஆளுமைகளுக்கு விருது வழங்கப் பட்டுள்ளது. மேலும் ஜனநாய கத்தின் 5-வது தூணாக இலக்கிய துறையை சேர்ந்தவருக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. அறிவியல் தமிழ் வளர்ந்து வருகிறது. இதை பண்டைய இலக்கியங்களில் படிக்க முடியாது. இப்போது எழு தப்பட்டுள்ளவற்றில்தான் படிக்க முடியும். இதை உணர்ந்து இலக்கி யம் சார்ந்த நபருக்கும் விருது வழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது என்று கூறினார். நீதிபதி சந்துரு பேசுகையில், “ஜனநாயகத்தை மையப்படுத்தி விருது வழங்குவதும், எனக்கு விருது வழங்கியிருப்பதும் பெருமைக்குரியதாக உள்ளது” என்றார். கே.பாலபாரதி பேசும்போது, “குடும்பத்தில் ஜனநாயகம் இருக்க வேண்டும். அதை உணர்ந்து தான் ஒரு குடும்பம் ஜனநாயக பாதுகா வலர் விருதை வழங்கியிருக்கிறது” என்றார். என்.ராம் பேசும்போது, “ஜனநா யகத்தின் பெயரில் இக்குடும்பத்தின் விருது வழங்கும் பணி தொடர வேண்டும்” என்றார்.