tamilnadu

img

சிதம்பரம் நகராட்சி அரசு பள்ளிக்கு விருது

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி கல்வித்துறையின் சார்பில் கடலூர் மாவட்ட அளவில் 2019–20ஆம் ஆண்டுக்கான ‘சிறந்த பள்ளி விருது’ சிதம்பரம் மானசந்து நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது. இதற்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் மாவட்ட கல்வி அலுவலர் சவுந்தரராஜன் தலைமையில் சனிக்கிழமை (மார்ச் 12) நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஜெயக்கொடி வரவேற்றார். குமராட்சி வட்டார கல்வி அலுவலர்கள் குமார், மோகன், நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்கள் ரமா, அனுராதா, பிரான்சிஸ் சேவியர், இலக்கியா, பள்ளி மேலாண்மை குழு தலைவி மாரியம்மாள் ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டினர்.