இந்த ரயில் பிற் பகல் 2.15 மணி அள வில் வைத்தர்னா ரயில் நிலையம் அருகே வந்த பொழுது, திடீ ரென ரயில் இன்ஜின் தனியாக கழன்று ஓடி யது. இன்ஜினுக்கும் ரயில் பெட்டிக்கும் இடையே உள்ள இணைப்பு துண்டிக்கப்பட்டதால், பயணிகள் இருந்த பெட்டிகள் தனியாக தள்ளாடி இன்ஜின் பின்னாடியே சென்றுள்ளது. இதனை கண்டு பயணிகள் அச்சத்து டன் கூச்சலிட்டனர். சிறிது தூரம் தானாக ஓடிய ரயில் பெட்டிகள் நின்றது. ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வேகமாக சென்றிருந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும்.