மதுரை, ஜன.15- உழவர் திருநாளான பொங்கல் பண் டிகை அன்று மதுரையில் முதல் ஜல்லிக் கட்டு போட்டி அவனியாபுரத்தில் நடைபெற்றது. ஜல்லிகட்டு போட்டியை அமைச்சர் கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாக ராஜன், பி.மூர்த்தி, ஆட்சியர் எஸ். அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கா. ப. கார்த்திகேயன், மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர. முன்னதாக மாடுபிடி வீரர் கள் மற்றும் அனைவரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். ஆன் லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்ட 300 மாடுபிடி வீரர்களும், 700 காளைகளும் பங்கேற்றனர். மாடுபிடி வீரர்களுக்கும், காளை உரிமையாளர் மற்றும் உதவி யாளர்களுக்கும் கொரோனா தொற்று இல்லாத சான்றிதழ் கட்டாயம் பெறப் பட்டு கண்காணிக்கப்பட்டது. போட்டி தொடங்கும் முன்பாக அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்த பின் னரே களத்திற்குள் அனுமதிக்கப்பட்ட னர்.
போட்டியில் கலந்துகொண்ட காளை களின் உரிமையாளர்கள் அதற்கான அனுமதிச்சீட்டுடன் ஒரு உதவியாளர் மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக் கப்பட்டது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கபடுவர் என்று அறிவிக்கப்பட்டது. போட்டி முழுவதும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கண்கா ணிப்பில் நடைபெற்றது. அவனியாபுரம் பகுதியில் 20 இடங்களில் போலீசார் தடுப்பு அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார்கள். ஒட்டுமொத்தமாக 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபடுத்தப்பட்டனர். ஒவ்வொரு சுற்றிலும் தலா 30 மாடு பிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டு,ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டி நடைபெற்றது. மொத்தம் 652 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவனியாபுரம் பகுதியை சேர்ந்த கார்த்தி 24 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார். வலையங் குளம் பகுதியை சேர்ந்த முருகன் 19 காளைகளை அடக்கி இரண்டாவது பரிசை பெற்றார். 11 காளைகளை அடக்கி பரத் மூன்றாவது பரிசைப் பெற்றார். முதலிடம் பிடித்தவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் காரும், இரண்டாம் இடத்தை பிடித்தவருக்கு சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி சார்பில் இரு சக்கர வாகன மும் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிலையில், மாடு வெளியேறும் பகுதியில் நின்றுகொண்டு ஜல்லிக் கட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டி ருந்த பாலமுருகன் ( வயது 19) என்ப வரை அந்த வழியாக வந்த ஒரு மாடு முட்டித்தள்ளியது. இதில் பலத்த காய மடைந்த பாலமுருகனை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.