தேனி,டிச.29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட 8 ஆவது மாநாடு டிசம்பர் 28,29 ஆகிய தேதிகளில் கம்பத்தில் நடைபெற்றது . மாநாட்டிற்கு எல்.ஆர்.சங்கரசுப்பு, சி.முனீஸ்வரன், சு.வெண்மணி ஆகியோர் தலைமை வகித்த னர். மாநாட்டை கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் ஏ.லாசர் துவக்கி வைத்து பேசினார் . மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் நிறைவுரை யாற்றினார். பி.ஜெயன் நன்றி கூறினார். மாநாட்டில் கட்சியின் மாவட்டச் செயலாளராக ஏ.வி.அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டார் . மாவட்ட செயற்குழு உறுப்பினர் களாக டி.வெங்கடேசன், எம்.ராமச்சந்திரன், ஜி.எம்.நாகராஜன், சி.முருகன், டி.கண்ணன், கே.எஸ்.ஆறுமுகம், சி.முனீஸ்வரன், இ.தர்மர், எஸ்.வெண்மணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானம்
போடி -மதுரை அகல ரயில் பாதையில் தேனி -மதுரை, தேனி -சென்னை ,தேனி -கோவை ஆகிய வழித்தடங்களில் உடனடி யாக ரயில் சேவையை துவக்க வேண்டும் .மேக மலை வருசநாடு பகுதிகளில் பல தலைமுறையாக குடி யிருந்து விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு அவர்கள் விண்ணப்பித்தபடி வன உரிமை சட்டப்படி பட்டா வழங்க வேண்டும் . அவர்களை வெளியேற்றும் முடிவை கைவிட வேண்டும் . வைகை, சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைகளை தூர்வார வேண்டும்.தேனி மாவட்டம் முழுவதும் உள்ள குளம் கண்மாய்களை தூர்வார நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பெரியகுளம் வட்டத்தில் முறைகேடாக பட்டா வழங்கப்பட்டு, கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வீடற்ற ஏழை களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.