tamilnadu

img

பண்டிகைக் கால போனஸ் கேட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் நூதன போராட்டம்

சென்னை, டிச. 29 - பண்டிகை காலங்களில் நலவாரியம் மூலமாக 2 ஆயிரம்  ரூபாய் போனஸ் வழங்க வேண்டு மென்று தமிழக அரசுக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். பண்டிகை கால போனஸ் வழங்க வேண்டும், ஆட்டோ ஆப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும், மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க  வேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று (டிச.29) தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் பொங்கல் வைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை மாவட்ட சிஐடியு  ஆட்டோ சங்கங்கள் சார்பில்  நடைபெற்ற இந்தப் போராட்டத் திற்கு தமிழ்நாடு ஆட்டோ தொழி லாளர் சம்மேளன செயல்  தலைவர் எஸ்.பாலசுப்பிரமணி யம் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழ்நாட்டில் மீட்டர் கட்டணத்தை உயர்த்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதுவரைக்கும் மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால், எரிபொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. இதனால், மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது. அதன்பிறகு, ஓட்டுநர்களிடம் தமிழக அரசு ஒரு கருத்து கேட்பு  கூட்டத்தை நடத்தியது. அப்போது  முதல் 1.5 கி.மீ.க்கு  50 ரூபாயும், அடுத்தடுத்த கி.மீ.களுக்கு 25 ரூபாயும் நிர்ணயிக்க வேண்டும் என்று அனைத்து சங்கங்களும் கோரிக்கைவிடுத்தன. மேலும் எரிபொருள் விலை, ஆட்டோ எண்ணிக்கை, குறைந்தபட்ச ஊதியம் என ஏதாவது ஒரு வகையில் விஞ்ஞானப்பூர்வமாக கட்டணத்தை நிர்ணயிக்க கோரினோம். ஆனாலும் 10 மாதங்களை கடந்தும் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை.

ஊலா, உபேர் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் அரசு  நிர்ணயித்த கட்டணத்தை விட  பல மடங்கு கூடுதலாக வசூலிக் கின்றன. குறிப்பாக 1.8 கிலோ  மீட்டருக்கு 90 ரூபாய் வசூலிக் கின்றன. ஆனால் அரசு கட்டணம் 25 ரூபாய்தான். சட்டவிரோத கட்டணக் கொள்ளையால், அந்நிறுவனங்கள் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி ரூபாய் லாபம் ஈட்டுகின்றன. ஓட்டுநர்களின் உழைப்பை சுரண்டுகின்றன. இதனை தவிர்க்க அரசே ஒரு  ஆட்டோ செயலியை உருவாக்க வேண்டும். ஓட்டுநர்களிடம் இருந்து 15 விழுக்காடு தொகையை பிடித்து, 5 ரூபாய் செலவினத்திற்கும், 5 ரூபாய் மக்களுக்கு சலுகையாகவும் பயன்படுத்தலாம். 5 ரூபாய் அர சுக்கு வருவாயாக கிடைக்கும். இதனால் மக்களுக்கு மலிவான விலையில் ஆட்டோ சவாரி செய்ய முடியும். ஆட்டோ நலவாரியத்தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் உள்ளது. சிறிய மாநில மான புதுச்சேரியில் பண்டி கையின்போது அம்மாநில அரசு 2 ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்குகிறது. அதேபோன்று தமிழக அரசும் நலவாரியம் வாயிலாக 2 ஆயிரம் ரூபாய் போனஸ் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்தப் போராட்டத்தில் சிஐடியு மாநில துணைப்பொதுச் செயலாளர் வி.குமார், மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன், சென்னை மாவட்ட நிர்வாகிகள் ெஜ.மு கமதுஅனீபா, இ.உமாபதி, ஏ.பக்கிரி (தென்சென்னை), ஆர்.கபாலி, கே.பிரபாகரன் (மத்தியசென்னை), ஏ.செல்வராஜ், வி.ெஜய கோபால், எஸ்.காதர்உசேன் (வடசென்னை) உள்ளிட்டோர் பேசினர். இதனையடுத்து தொழிலாளர் நல ஆணையரை சந்தித்து சங்கத் தலைவர்கள் மனு அளித்தனர்.