tamilnadu

img

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடைவிதிக்க வேண்டும்

கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் மதமோதலை தூண்டும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதிக்க தமிழக அரசு மேல்முறையீட்டு நடவடிக்கைக்கு செல்ல வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். தர்மபுரி மாவட்டம் அரூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, கே.பாலகிருஷ்ணன் மேலும் கூறியதாவது:


கடந்த சில தினங்களுக்கு முன், தமிழக முதல்வரை சந்தித்து, வாச்சாத்தி வழக்  கில் நீதிமன்ற தீர்ப்பின் அம்சங்  களை நிறைவேற்றித் தருமாறும், வாச்சாத்தி கிராம மக்களின் தேவை யை பூர்த்தி செய்யுமாறு வலி யுறுத்தினோம், தமிழக முதல்வரும்  வாச்சாத்தி கிராம மக்களின் வாழ் வாதாரம் பாதுகாக்கப்படும் என உறுதி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்  திரை நடத்திவருகிறார். இவர் மக்க ளுக்காக பாதயாத்திரை நடத்த வில்லை, மக்களிடையே மத மோதலை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதற்காக யாத்திரை நடத்துகிறார். சென்னிமலையில் பாதயாத்திரைக்கு ஆதரவு திரட்ட வேண்டும் என்ற நோக்கில் கிறிஸ்  தவ மக்களுக்கும் இந்துக்களுக் கும் மோதல் ஏற்படுத்தும் விதமாக, போராட்டம் நடத்தியுள்ளார். இதன்  பின்னால் ஆர்எஸ்எஸ் செயல்படு கிறது. ஒரு கட்சி போராட்டம் நடத்து வது ஜனநாயக உரிமை. ஆனால், மதமோதல் ஏற்படுத்துவதற்காக போராட்டம் நடத்துவதை அ னுமதிக்கக் கூடாது. ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டில் பேரணி நடத்த தமிழக அரசிடம் அனுமதி கேட்டது. பரிசீலனையில் உள்ள போதே நீதிமன்றத்தில் பேர ணிக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடுத்தது. நீதிமன்றமும் இதற்கு  அனுமதி அளித்துள்ளது வருத்த மளிக்கிறது. இந்த தீர்ப்பின் மீது தமி ழக அரசு மேல்முறையீடு செய்து,  ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும்.

அதிகரிக்கும்  பட்டாசு விபத்துக்கள்

தமிழ்நாட்டில் கடந்த 10 தினங்க ளில் பட்டாசு ஆலைகளில் விபத்து  ஏற்பட்டு 30க்கும் மேற்பட்டோர் பலி யாகியுள்ளனர். தருமபுரி மாவட்டத் தில் 7 பேர் இறந்துள்ளனர். பட்டாசு  தொழிற்சாலைகளில் லைசன்ஸ் உள்ளதா, பாதுகாப்பு குறைபாடு உள்ளதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்காமல் என்ன செய்  கின்றனர் என்ற கேள்வி எழுகிறது. முறையற்ற பாதுகாப்பற்ற பட்டாசு தொழிற்சாலைகளுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பதா லேயே விபத்துகள் நடக்கின்றன. உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, முறையாக  கண்காணிக் காத அதிகாரிகள் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும். பட்டாசு ஆலை உயிரிழப்பு ஏற்  படும் போது ஒன்றிய அரசு நிவார ணம் வழங்குவதில்லை. உயிரி ழந்தோரின் குடும்பத்தை பாது காக்க ஒன்றிய அரசு தலா ரூ.20  லட்சம் வழங்க வேண்டும். பட்டாசு  ஆலையில் பணிபுரியும் தொழிலா ளர்களுக்கு ஆலை நிர்வாகமே  இன்சூரன்ஸிற்கான பிரியம் தொகையை செலுத்தவேண்டும்.

காவல்துறை கைவிட வேண்டும்

தமிழ்நாட்டில் சமீபத்தில் கொலை, கொள்ளை குற்றத்தில் ஈடு படுவோர், காவல்துறையினரால் என்கவுண்ட்டர் என்ற பெயரில் சுட்டு கொல்லப்படுகின்றனர். குற்ற வாளிகளை பிடித்து நீதிமன்றத் தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்  தர வேண்டுமே தவிர, சுட்டுக்கொல்  லக் கூடாது.  அதேபோன்று கைது செய்யப் பட்டோரை நீதிமன்றத்தில் ஆஜர்  படுத்தும் போது கை உடைந்து வரு கின்றனர். இதை கேட்டால் கழி வறையில் வழுக்கி விழுந்ததாக கூறுகின்றனர். இதுபோன்ற தாக்கு தல்களை காவல்துறை கைவிட  வேண்டும். கொலை கொள்ளை  நடக்காமல் இருக்க புலனாய்வுத் துறையை வலுப்படுத்தவேண்டும். காவல்துறை உயர் அதிகாரிகளின் மெத்தன போக்காலேயே இது போன்ற செயல்பாடுகள் நடக்கின்றன. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.  பேட்டியின்போது, கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாநி லக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் ஏ.குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.