மதுரை, மே 24- கொரோனா பேரிடர் கால நிவாரண நிதியாக 15 ஆயிரம் வழங்கவேண்டும். ஆட்டோவில் ஓட்டுநருடன் மூன்று நபர்கள் பயணிக்க அனுமதிக்க வேண் டும், காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்வது, அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டுமென வலி யுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐ டியு மாவட்டச் செயலாளர் இரா. தெய்வராஜ், மாவட்டத் தலை வர் மா. கணேசன், ஆட்டோ தொழி லாளர் சங்க மாவட்டச் செயலா ளர் என். கனகவேல், கே.அறிவழ கன், எம். அழகர்ராஜ், அபே ஆட்டோ சங்க நிர்வாகி செல்வம். ஏ.பெரியதம்பி, முனீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர் மாவட்ட ஆட்சி யரிடம் கோரிக்கை மனு அளிக்க முயன்றவர்களை காவல்துறை யினர் கைது செய்தனர்.